டெல்லி: எந்த மாதிரியான சலுகை கிடைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நடுத்தர மக்கள் மனதில் நிலவி வந்தது. இதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களும் ஓடிக் கொண்டிருந்தன. கடைசியில் வருமான வரிச் சலுகையை அறிவித்து அசத்தி விட்டார் பியூஷ் கோயல்.
பட்ஜெட்டில் முக்கியமாக விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது.
அதேபோல, 10 சதவீத இடஒதுக்கீட்டை தந்து முன்னேறிய சமூகத்தினருக்கும் சலுகை தந்துவிட்டார்கள். 8 லட்சத்துக்கு கீழ் ஆண்டு வருமானம் உள்ளவங்க ஏழைகள் என்று கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வரிச்சலுகைககள்
அதனால் இதற்கு நடுவில் மாட்டி விழித்து கொண்டிருப்பது நடுத்தர மக்கள்தான். அதனால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு வரிச்சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
செம அறிவிப்பு
குறிப்பாக வருமான வரி உச்ச வரம்பு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் இருந்து உயர்த்த வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாயின. அதற்கேற்ப அதிரடியாக 5 லட்சமாக அதை உயர்த்தி அசத்தி விட்டது மோடி அரசு.
மீம்ஸ்கள்
முன்னதாக இன்றைய பட்ஜெட்டில் தங்களுக்கான சலுகை, அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என்று நடுத்தர மக்கள் ஆர்வமாக இருந்தனர். இதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களும் ஓடிக் கொண்டிருந்தன.
அமைதிப்படை
அதில் ஒன்றுதான் இந்த லகான் படக் காட்சி.. காத்திருந்த மக்களை பியூஷ் கோயல் கைவிடவில்லை. பட்ஜெட் அறிவிப்பின் கடைசியாக மாத ஊதியதாரர்களுக்கு வருமான வரி உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்தி அசத்தி விட்டார்.. மக்கள் அத்தனை பேரும் பிச்சுமணி வடிவேலு போல ஈஸ்வரா என்று உற்சாகமாக கத்த வைத்து விட்டார் கோயல் என்றே கூற வேண்டும்.


Click it and Unblock the Notifications