Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
டெல்லி: மத்திய அமைச்சர், பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்த மத்திய இடைக்கால பட்ஜெட், முழு பட்ஜெட் போல விரிவாக இருந்தது. புதிய அறிவிப்புகளுடனும் இருந்தது.
விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் நலனுக்காக சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்மைகள்:
- 2 ஹெக்டேர் நிலத்திற்கு குறைவாக கொண்டுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 12 கோடி பேர் பலனடைவார்கள்.
- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மெகா பென்ஷன் திட்டத்தால் அவர்களுக்கு 60 வயதான பிறகு மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்.
- தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் என்பதிலிருந்து இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 கோடி பேர் பலனடைவார்கள். இவையெல்லாம் நன்மைகள்.
எதிர்மறைகள்:
- விவசாயிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் மற்றும், பென்ஷன் திட்டத்திற்கான, நிதி ஆதாரத்தை அரசு எப்படி திரட்டப்போகிறது?
- வருமான வரி விலக்கு உயர்த்தப்பட்டிருந்தாலும், அதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் கணிசமாக குறைந்துவிடும் என்பது நிதியியல் நிபுணர்கள் பார்வை
- மேற்குறிப்பிட்ட சலுகைகளால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
நிதிப்பற்றாக்குறை என்பது 6 சதவீதமாக இருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டதாக பியூஷ் கோயல் அறிவித்தார். ஆனால், புதிய கவர்ச்சி அறிவிப்புகளால் மீண்டும் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது தெரிந்தும் பியூஷ் கோயல் இந்த அறிவிப்புகளை வெளியிட்டது தேர்தலுக்குத்தானே என்ற கேள்வி எழுகிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary