டெல்லி:திரைப்பட படப்பிடிப்புகள் சிக்கலின்றி இனி நடைபெற இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒற்றை சாளர அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை அவர் இடைக்கால பட்ஜெட்டில் வெளியிட்டு உள்ளார். அவர் மேலும் கூறியதாவது: திரைப்படத்துறையானது மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உள்ளடக்கிய ஒரு துறை. அந்த பொழுது போக்கு துறையை ஊக்கமளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் சுலபமாக நடைபெற இணையதள வழி ஒற்றைச் சாளரமுறை அனுமதி அளிக்கப்படும்.கடந்த காலங்களில் இதுபோன்ற வசதிகள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே கிடைத்தது.
இச்சட்டத்தின்படி, தற்போது இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் கிடைக்கும். புதிய பட்ஜெட்டில், திரைப்படத்துறையில் மலிந்து வரும் வீடியோ பைரசியை தடுக்க ஒளிப்பதிவு சட்டத்தின்படி இயற்றப்படும் சட்டவிரோத திரைப்பட திருட்டு கட்டுப்பாட்டு சட்ட விதிகளும் அடங்கும்.
அதற்கேற்ப, திருட்டு விசிடியைத் தடுக்கவும் சட்டவிதிகள் இயற்றப்படும். படபிடிப்புக்கான பல்வேறு அரசு அனுமதிகளை ஒற்றை சாரள முறையில் எளிமையாக பெற முடியும். இதன்மூலம் நேரடியாக எந்த இடங்களுக்கும் சென்று அனுமதி தருமாறு காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறினார்.