இந்த 9,000 கோடி ரூபாய், உங்களோடதான்னு பாத்துச் சொல்லுங்கப்பு..? காத்திருக்கும் அஞ்சலகம்..!

நம் தமிழகத்தின் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்கள் மற்றும் நகர் புறங்களில் இன்னும் பணத்தை பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் காலாச்சாரம் வரவில்லை.

நகர்புறங்களே அப்படித் தான் இருக்கிறது என்றால் கிராமபுறங்களைச் சொல்லவே தேவை இல்லை. கிராமபுற மக்களுக்கு பங்குச் சந்தைகள், மியூச்சுவல் ஃபண்டுகள் எல்லாமே ஒரே இடம் தான். அஞ்சலகம்.

அட ஆமாங்க அஞ்சலகத்தில் நிரந்தர வருமானம் கொடுக்கக் கூடிய அஞ்சல ஆர்டி, மாதாந்திர வருமான திட்டங்கள், கிஷான் விகாஸ் பத்திரம், ஐந்து வருட டெபாசிட்டுகள் என கிராம புற மக்களின் உற்ற தோழனாகவே இருக்கிறது அஞ்சலகங்கள்.

வேண்டாம்யா..?

வேண்டாம்யா..?

ஒருவேகத்தில் காசு சேர்க்க அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் தொடங்கப்பட்டு, அடுத்த சில மாதங்களிலேயே ஒழுங்காக காசைச் செலுத்தாமல் விட்ட கணக்குகள், போட்ட டெபாசிட்டுகளை முறையாக கட்டணம் செலுத்தி பெறாமல் இருப்பது, பத்திரங்களைச் சமர்பித்து பணத்தை வட்டி உடன் திருப்பி பெறாமல் இருப்பது என அசல் தொகை மட்டும் சுமார் 9,395 கோடி ரூபாய் இருக்கிறதாம்.

நம்பர் 1

நம்பர் 1

கிஷான் விகாஸ் பத்திரம் எனப்படும் விவசாய பத்திரங்களில் 2,429 கோடி ரூபாய்க்கான பத்திரங்களைச் சமர்பித்து பணத்தை வாங்காமல் அஞ்சலகங்களிலேயே தேங்கிக் கிடக்கிறதாம். அஞ்சலக திட்டங்களிலேயே அதிகமாக பணத்தைக் கோராமல் இருப்பது இந்த திட்டத்தின் கீழ் தானாம்.

எந்த திட்டங்களில் எவ்வளவு..?

எந்த திட்டங்களில் எவ்வளவு..?

விவசாயப் பத்திரங்களைத் தொடர்ந்து மாதாந்திர வருமானத் திட்டங்களில் 2,057 கோடி ரூபாயும், அதனைத் தொடர்ந்து டேர்ம் டெபாசிட்டுகளில் 1,935 கோடி ரூபாயும், தேசிய சேமிப்புச் சான்றுகள் மூலம் 1,888 கோடி ரூபாயும், ஆர்டி திட்டங்களில் 796 கோடி ரூபாயும், பிபிஎஃப் Public Provident Fund திட்டத்தின் கீழ் 289 கோடி ரூபாயும் உரிமை கோரப்படாமல் இருக்கிறதாம்.

என்ன செய்கிறார்கள்..?

என்ன செய்கிறார்கள்..?

வங்கிகளில் இப்படி ஒரு குறிப்பிட்ட வருடத்துக்கு மேல் கணக்குகளில் இருக்கும் தொகையை உரிமை கோரவில்லை என்றால் அந்த தொகையினை ஆர்பிஐயின் Deposit Awareness and Education Fund (DEAF) திட்டத்துக்கு மாற்றி விடுவார்கள். ஆனால் அஞ்சலகங்களில் இந்த தொகைகளை உரிய நபர் வந்து முறையாக உரிமை கோரும் வரை அஞ்சலகங்களிடமே தான் பணம் இருக்குமாம்.

தமிழனா கொக்கா..?

தமிழனா கொக்கா..?

தங்கள் முதலீட்டுத் தொகைகளை உரிமை கோராத நபர்கள் மேற்கு வங்கத்தில் தான் அதிகம். மேற்கு வங்கத்தில் மட்டும் 1,591 கோடி ரூபாய் உரிமை கோறப்படாமல் இருக்கிறதாம். அதனைத் தொடர்ந்து தில்லியில் 1,112 கோடி ரூபாயும், அவர்களைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் 1,034 கோடி ரூபாயும் இருக்கிறதாம். நம் தமிழர்கள் தான் காசு விஷயத்தில் கறார் ஆச்சே அப்புறம் எப்புடிங்க நம்ம பேர் எல்லாம் இதுல வரும்..?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+