இந்தியாவின் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான சுவிக்கி Kint.io என்கிற செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஸ்டார்டப் நிறுவனத்தை கையகப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த Kint.io நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறையில் இன்னும் ஆழமாக செயல்பட்டு கற்றுக் கொள்ளவும் பெரிய அளவில் பயன்படுமாம். இதை வெளியே சொல்லாத ஒரு பெரிய தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார்களாம்.
இந்த Kint.io நிறுவனம் 2014-ம் ஆண்டு பெங்களூரூவில் தொடங்கப்பட்டதாம். இதன் நிறுவனர்களாக பவித்ரா சோலை ஜவஹர் மற்றும் ஜகன்நாதன் வீரராகவன் ஆகியோர்களும் இனி சுவிக்கி அணியில் இணைந்து நிறுவனத்தை வளர்ப்பார்களாம்.
ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் பிரச்னையையும் சரி செய்ய இது போல தனியாக தொழில் செய்து சாதிக்க நினைப்பவர்களை உள்ளே கொண்டு வருவது எங்கள் அடிப்படை நோக்கங்களில் ஒன்று என சுவிக்கி நிறுவனத்தின் தரவு அறிவியல் துறையின் தலைமைப் பொறியாளர் டேல் வாஸ் தெரிவித்திருக்கிறார்.
உலக அளவில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பெரிய அலவில் வளர்ந்திருக்கிறது. ஆனால் அதற்க்த் தேவையான தரவுகள் இன்றுவரையாக முறையாகக் கிடைப்பதில்லை. குறிப்பாக இந்தியா போன்ற பல மொழி, கலாச்சார மற்று பழக்க வழக்கங்களைக் கொண்ட நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)-க்கான தரவுகள் கிடைப்பதை தடுக்கிறது. இந்த இடத்தைத் தான் சுவிக்கி நிரப்ப ம்யல்கிறது அதைக் கண்டு நாங்கள் வியக்கிறோம் என்கிறார் Kint.io நிறுவனத்தின் நிறுவனர் பவித்ரா மற்றும் ஜகன்நாதன்.