எல்பிஜி சிலிண்டர்களின் இரண்டாவது பெரிய இறக்குமதியாளரான இந்தியா..! காரணம் மோடிஜி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தில்லி: பிதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் இந்தியா முழுமைக்கு சுத்தமான சமையல் எரிவாயுவை கொடுக்கத் தொடங்கியது பாஜக அரசு.

அதன் காரணமாக 2014 - 2015 -ல் 14.8 கோடி சிலிண்டர்கள் கொடுக்கப்பட்டு வந்த எண்ணிக்கை இப்போது 2017 - 2018 காலத்தில் 22.4 கோடி சிலிண்டர்களாக அதிகரித்திருக்கிறது.

எல்பிஜி சிலிண்டர்களின்  இரண்டாவது  பெரிய இறக்குமதியாளரான இந்தியா..! காரணம் மோடிஜி

ஆண்டுக்கு சராசரியாக 15 சதவிகிதம் என இந்தியாவில் சிலிண்டர் விநியோகம் அதிகரித்திருக்கிறது. இந்த 22.45 கோடி சிலிண்டர்களை ஆண்டு முழுவதும் கொடுக்க 22.5 மில்லிய்டன் டன் எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்கிறதாம்.

இந்தியாவின் எண்ணெய் வளத் துறை அமைச்சகத்தின் கணிப்புப் படி 2025-ம் ஆண்டுக்குள் எல்பிஜி சிலிண்டர்களின் இறக்குமதி 30.3 மில்லியன் டன்னாகவும், 2040-ம் ஆண்டுக்குள் 40.6 மில்லியன் டன்னாகவும் அதிகரிக்கும் என கணித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் இப்போது 90 சதவிகிதங்களுக்கு மேல் வீடுகளில் எல்பிஜி சிலிண்டர்கள் தான் பயன்படுத்தப்படுகிறதாம் கூடிய விரைவில் இதை 100 சதவிகித மக்களுக்கும் எல்பிஜி சிலிண்டர்கள் கிடைக்கச் செய்வோம் என ஆசிய மாநாட்டில் பெருமிதப்பட்டிருக்கிறாராம் எண்ணெய் வளத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான்.

பாஜக ஆட்சிக்கு வந்த போது மொத்த இந்திய வீடுகளில் 55% வீடுகளுக்கு மட்டுமே எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாம். அவைகளை பாஜக தான் படிப்படியாக திட்டமிட்டு இன்று 90% வீடுகளுக்கு எல்பிஜி கொடுத்தார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India is the second largest lpg importer in the world

india is the second largest lpg importer in the world
Story first published: Thursday, February 7, 2019, 17:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X