டெல்லி: நாட்டில் 50 சதவீத பான் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கப்பட வில்லை என மத்திய நேரடி வரி விதிப்புத்துறைத் தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
வருமானவரி கட்ட வைக்க அரசு ஆயிரம் வழியில் கொக்கி போட்டும் இன்னும் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. நீங்க என்ன உத்தரவு போட்டாலும், நாங்க செய்றதத் தான் செய்வோம் என அடம்பிடிப்பவர்களே இங்கு அதிகம்.
அந்த வகையில், வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும் போது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு பலமுறை மைக் வைத்து கத்தியும் பிரோஜனம் இல்லாததால், கடைசியில் உச்ச நீதிமன்றத்தில் போய் உத்தரவு வாங்கி வந்துவிட்டது.
பாதி பேர் இணைக்கவில்லை
ஆனாலும், இதுவரை 50 சதவீத ஆதார் எண்களே பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாம். அசோசெம் கூட்டத்தில் பேசிய மத்திய நேரடி வரி விதிப்புத்துறைத் தலைவர் சுஷில் சந்திரா, இந்த தகவலை கூறியிருக்கிறார்.
குறைவான அவகாசம்
இந்தியாவில் இதுவரை 42 கோடி பேர் தான் பான் எண் வாங்கி வைத்துள்ளார்கள். ஆனால், அதில் 23 கோடி மக்கள் தான் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்துள்ளார்கள். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் 50 நாட்களுக்கும் குறைவான அவகாசமே உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
எச்சரிக்கும் மத்திய அரசு
வருவதாகவும் சுஷில் சந்திரா தெரிவித்தார். ஆதாருடன் இணைக்கப்பட்டால் தான் அவர்களின் பான் கார்டு அசலா, நகலா என்பது தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
பான் இணைப்பு கட்டாயம்
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. எனவே பான் எண்ணுடன் ஆதாரை
இணைக்காதவர்கள் இப்போதே இணைத்துவிடுவது நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
More From GoodReturns

வருமானத்தை மறைத்த உணவகங்கள்: சிக்கிய 63,000 உணவகங்கள்! IT டிபார்ட்மெண்ட் அனுப்பிய நோட்டீஸ்!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications