சென்னை: தமிழக அரசின், 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்:
சங்கீத வித்வான் போல ஓபிஎஸ் வாசித்தார்
2 மணி நேரம் 40 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றிய பன்னீர் செல்வம்
மின் ஆளுமை திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்
பதிவுத்துறையில் இணையவழி பயன்பாடுக்காக நவீன மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது
மாநில சொந்த வரி வருவாயில் வணிக வரி முக்கியத்துவமானதாகும்
வணிக வருவாய் 2019-20ல் 96177.14 கோடியாக இருக்கும் என கணிக்கிறோம்
மாநில ஆயத்தீர்வை போக்கினை கருத்தில் கொண்டு 7262.33 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்
முத்திரைத்தாள் கட்டண வருவாயில் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது
முத்திரைத்தாள் தீர்வையாக, வரும் நிதியாண்டில், 11512.10 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்
கடந்த நிதியாண்டை விட 2000 கோடி வருவாய் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்
வாகனங்கள் மீதான வரி வருவாய், 6510.70 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்
மாநில சொந்த வரி வருவாய் ரூ.1.26 லட்சம் கோடியாக கணிக்கப்பட்டுள்ளது
2019-20ல் மாநில மொத்த வருவாய் வரவுகள் 1 லட்சத்து 97 ஆயிரம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது
ஊதிய உயர்வினால் ஏற்படும் நிதிச்சுமை, உதய் திட்டத்தால் ஏற்படும் கூடுதல் பொறுப்பு போன்றவை தொடரும்
மின் மாநிலம், உணவு மானியம், சமூக நலத்திட்டங்களின் கீழ் வரும் ஓய்வூதியங்கள் போன்ற திட்டங்கள் தொடரும்
மொத்த வருவாய் செலவீனங்கள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 35.93 கோடி ரூபாயாக இருக்கும்
இதனால் வருவாய் பற்றாக்குறை 14314.76 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது
மூலதன செலவுகளுக்கு அரசு எப்போதும் தனிக் கவனம் செலுத்தி வந்துள்ளது

2011 முதல் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது
கிராமப்புற கோவில்களுக்கான நிதி உதவி திட்டமும், ஒருகால பூஜை திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 281.86 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
பல்வேறு திருமண நிதி உதவி திட்டங்களுக்காக ரூ.726.32 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம்
பணிபுரியும் பெண்களுக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு
ஒருங்கிணைந்த குழந்தைகள் பணிகள் மேம்பாடு திட்டத்தில், 24 லட்சம் குழந்தைகள் பலனடைகிறார்கள்
2019-20 பட்ஜெட்டில் சமூக நலத்துறைக்கு 5305 கோடி ஒதுக்கீடு

2 வழித்தடங்கள் பிப்ரவரி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது
மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடம் நீடிக்க ஆய்வு
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தின்கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள்
மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-கோயம்பேடு பஸ் நிலையம் வரை 52.01 கி.மீ நீளமுள்ள வழித்தடங்களில் மெட்ரோ திட்டம்
சென்னை மெட்ரோ ரயிலின் 2வது கட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ரயில் பாதை 172.81 கி.மீயாக அதிகரிக்கும்
நடப்பு பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக 2681 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
ஜெர்மன் வளர்ச்சி வங்கி கடன் உதவியுடன் 5890 கோடி செலவில் 12 ஆயிரம் புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகள் அறிமுகம்
2000 மின்சார பஸ்கள் வாங்கி பயன்படுத்தப்படும் திட்டம் செயல்படுத்தப்படும்
500 மின்சார பஸ்கள் சென்னை, மதுரை, கோவையில் முதல்கட்டமாக அறிமுகம் செய்யப்படும்
டீசல் விலை உயர்வால் ஏற்பட்ட நிதி இழப்பை சரி செய்ய போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் நிதி தரப்பட்டது
போக்குவரத்து துறைக்கு இந்த பட்ஜெட்டில் 1297.83 கோடி ஒதுக்கீடு
அம்மா மகப்பேறு பரிசு பெட்டகம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தும்
அரசு மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள், ஏழை, எளிய நலிவடைந்தோருக்கு கிடைக்க உறுதி
உலக வங்கி கடன் உதவியுடன் 2685.19 கோடி செலவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்
அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் முக்கிய உடற்பரிசோதனைகள் தொகுப்பாக கிடைக்க உறுதி செய்யப்படும்
இந்த திட்டத்திற்கு தேவைப்படும் கருவிகள், உபகரணங்கள் வழங்கப்படும்
உடற்பரிசோதனை தொகுப்பு திட்டத்திற்கு வரும் 3 ஆண்டுகளில் 247 கோடி செலவிடப்படும்
2019-20ம் நிதியாண்டில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.12,563.83 கோடி ஒதுக்கீடு
நிதி உதவி கிடைக்காவிட்டாலும் தமிழக அரசு தொடர்ந்து இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது
2019-20ம் நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு - ஓபிஎஸ்
குறைந்த செலவில் தரமான உயர் கல்வி பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்
29 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரி துவங்க அனுமதி வழங்கியுள்ளோம்
முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த 460.25 கோடி ஒதுக்கீடு
சர்வதேச தரத்திற்கு கல்வி நிறுவனங்கள் தரத்தை மேம்படுத்த தனியார் பல்கலை. நிறுவும் சட்டத்தை இயற்றியுள்ளோம்
அரசு பல்கலை. உட்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்படும்
கட்டமைப்பை மேம்படுத்த அண்ணா பல்கலை.க்கு ரூ.100 கோடி நிதி உதவி வழங்கப்படும்
உயர் கல்வித்துறைக்கு ரூ.4584.21 கோடி ஒதுக்கீடு
உலக வங்கி நிதி உதவியுடன், 2வது கட்ட திட்டப் பணிகள் ரூ.1171 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது
தமிழக சாலை மேம்பாடு ரூ. 459.74 கோடி ஒதுக்கீடு
சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது
சென்னை சுற்றுவட்ட சாலைக்கு, கடன் உதவி பெற ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை
இந்த திட்டம் சென்னை சுற்றுவட்ட சாலை தரத்தை மேம்படுத்தும்
2019-20ம் ஆண்டில் 206 ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்
நபார்ட் வங்கி உதவியின் கீழ் ரூ.299.60 கோடி செலவில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டத்திற்காக ரூ. 13,605.19 கோடி ஒதுக்கீடு
38,000 குடியிருப்புகளை அமைக்க திட்டம் செயல்படுத்தப்படும்- ஓபிஎஸ்
சென்னை தவிர்த்த பிற நகரங்களில் ரூ.5000 கோடி மதிப்பீட்டில் வீட்டு வசதி திட்டம்
தமிழ்நாடு உறைவிட நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது
நகர்ப்புற வறுமை ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது
தீனதயாள் உபாத்யாயா, திட்டத்தின்கீழும், தமிழக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்திற்கு நிதி ஒதுக்கீடு
ஒட்டுமொத்தமாக வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக ரூ. 1031.53 கோடி ஒதுக்கீடு
மரபுத்திறன் மிக்க நாட்டின, கலப்பின காளைகளை கொண்டு உறை விந்து நிலையம்
வீரியம் மிக்க காளை மாடுகளை உற்பத்தி செய்ய அதிரடி திட்டம்
இந்த திட்டத்திற்காக 43 கோடி ஒதுக்கீடு
37 அணைகளில் கட்டமைப்பை புணரமைக்கும் பணிகளை 2வது கட்டமாக மேம்படுத்தப்படும்
அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் தொடங்க உள்ளது
அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு
திட்டத்தின் ஒரு பகுதியாக சுய பயன்பாட்டுக்கு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ரூ.132.8 கோடி செலவில் செயல்படுத்த முடிவு
2019-20 பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு ரூ.5983.98 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்காக ரூ. 170.13 கோடி ஒதுக்கீடு
பாக் விரிகுடா பகுதியில் 1600 கோடி திட்ட மதிப்பில் மீன்பிடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
முதல் கட்டமாக 500 இழுவலை படகுகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு
ராமநாதபுரம் மாவட்டம், பூம்புகார் துறைமுகத்தில் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது
ரூ. 420 கோடி செலவில் தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் மீன்பிடி துறைமுகங்களை கட்ட அனுமதி
ஒக்கி புயலுக்கு பிறகு மீனவர்களிடமிருந்து கரையோரத்திற்கு சீரான தொலைதொடர்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது
மீனவர்கள் தகவல் தொடர்புக்காக 18 உயர்மட்ட கோபுரங்கள், 18 கட்டுப்பாட்டு அறைகள் கட்டப்பட்டுள்ளன
ஆபத்து காலங்களில் 200 கடல் மைல் தூரத்திலுள்ள படகுகளை கண்காணிக்க முடியும்
வரும் நிதியாண்டில் மீன்வளத்துறைக்கு, ரூ. 927.85 கோடி ஒதுக்கீடு
உரிய காலத்தில் பயிர்க்கடன் திரும்ப செலுத்துவோருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது
வரும் நிதியாண்டில் 10,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
75,448 பெண்கள் இலவச கறவை மாடு திட்டத்தால் பலன் பெற்றுள்ளனர்
விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
விலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும்-ஓபிஎஸ்
தீவன அபிவிருத்தி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு
கால்நடை பராமரிப்பு துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளோம்
படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்தார்
21.70 லட்சம் விவசாயிகள் பிரதமரின் வேளாண் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்
2019-20ம் நிதியாண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் புதிய பகுதிகள், பயிர்கள் சேர்க்கப்படும்
ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற திடீர் பாதிப்புகளும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படும்
இத்திட்டத்திற்கான தமிழக காப்பீடு பங்குத்தொகையாக 621.51 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
1361 கோடி செலவில் மேலும் 2 லட்சம் ஹெக்டேர் செலவில் நுண்ணீர் பாசன திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்
சூரிய சக்தியில் பம்பு செட்டுகளை இயக்க 90 சதவீத மானியம் வழங்குகிறோம்
10 குதிரை சக்திகள் வரை இயங்கும் 2000 சூரிய மின்சக்தி பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம்
கணினி இணைப்பு திட்டத்தால், காவல்துறை நவீனமயமாக்கப்பட்டுள்ளது
காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு- ஓபிஎஸ்
நவீனமயமாக்கும் திட்டம் உட்பட காவல்துறைக்கு 8,884.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது
யுனெஸ்கோ தயாரித்துள்ள செல்வாக்குள்ள மொழி பட்டியலில் தமிழ் 14வது இடத்தில் உள்ளது
இந்த பட்டியலில் தமிழை 10வது இடத்திற்கு கொண்டுவர முயற்சி எடுத்துள்ளோம்
ஹார்வார்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டுள்ளது
பிற சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
நலிவடைந்த பிரிவினருக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது
தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது வேட்டி, சட்டை இலவசமாக தரப்பட்டது
சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3958 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது- ஓபிஎஸ்
வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு
2 லட்சம் கார்கள், 4 லட்சம் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்
கஜா புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.1700 கோடி ஒதுக்கீடு
விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம்
சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.14.99 கோடி ஒதுக்கீடு
சென்னை, கோவை, மதுரையில் முதல்கட்டமாக 500 மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக ரூ.1031 கோடி ஒதுக்கீடு- ஓபிஎஸ்
தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது
கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட குறியீடுகளில் தனிக்கவனம்
மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
இந்த நிதியத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு- ஓபிஎஸ்
செலவீனங்கள், 208617 கோடியாக இருக்கும் என கணக்கீடு
வரும் நிதியாண்டில் தமிழக கடன் அளவு 3.97 லட்சம் கோடியாக இருக்கும்

எனது குல தெய்வம் ஜெயலலிதா- ஓபிஎஸ் உருக்கம்
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்

நிதி நிலை அறிக்கையுடன் சட்டசபைக்கு வந்து சேர்ந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
பொறியியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படுமா?
அரசு கல்லூரிகளில் நவீனமுறை மேம்படுத்தப்படுமா?
ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?
மக்களை கவரும் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பு
நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்
பட்ஜெட்டில் மத்திய அரசை போல் மாநில அரசும் புதிய சலுகைகளை அறிவிக்க வாய்ப்பு

More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications