இந்தியாவின் டாப் 4 ஐடி நிறுவனங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் படி இந்திய ஐடித்துறையில் கடந்த நிதியாண்டில் மோசமான நிலையில் இருந்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை இந்த வருடம் சிறப்பான முறையில் உயர்ந்துள்ளது எனத் தெரிகிறது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் ஹெச்சில் ஆகிய 4 முன்னணி நிறுவனங்கள் 2018ஆம் ஆண்டில் டிசம்பர் வரையிலான 9 மாத காலகட்டத்தில் மட்டும் சுமார் 70,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது. இது 2017-18ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகம் என்பது வியப்புக்குரிய விஷயம்.

சுமார் 46 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்த 4 நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் வெறும் 13,972 பேரை மட்டுமே பணியில் அமர்த்திய நிலையில் இந்த வருடத்தின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது இத்துறை மீண்டும் வளர்ச்சி பாதைக்குச் சென்றுள்ளது தெளிவாகத் தெரிகிறது. மேலும் அனைத்து முன்னணி நிறுவனங்களும் ஆட்டோமேஷனில் இறங்கிய காரணத்தால் கடந்த நிதியாண்டில் சில நிறுவனங்கள் வழக்கத்தை விடவும் குறைவான ஊழியர்களையே பணியில் அமர்த்தியது குறிப்பிடத்தக்கது.
டிசிஸ் நிறுவனத்தில் இந்த வருடம் சுமார் 22,931 பேரைப் பணியில் அமர்த்தியுள்ளது, இதோடு 28,000 மாணவர்களுக்குக் கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளது. கடந்த வருடம் இதே டிசிஎஸ் வெறும் 3,657 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பை அளித்தது. இதேபோல் இந்த 9 மாத காலத்தில் இன்போசிஸ் 21,398 பேரையும், ஹெச்சிஎல் 12,247 பேரையும், விப்ரோ 12,456 பேரையும், பணியில் அமர்த்தியள்ளது.
More From GoodReturns

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications