ஃபியூச்சர் குழுமம், இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் ரூ.150 முதல் 200 கோடி வரைதனியாக முதலீடு மேற்கொள்ள இருக்கிறார்களாம்.
இந்த முதலீட்டின் மூலம் இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் மட்டும் சுமார் 25 பிக் பசார் அவுட் லெட் கடைகளை நிறுவ இருக்கிறார்கள்.
வரும் ஏப்ரல் 2019-ல் இருந்து இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் கடை திறப்பதற்கான வேலைகளைத் தொடங்க இருக்கிறார்களாம்.
இந்த விரிவாக்கம் மற்றும் புதிய பிக் பசார் அவுட் லெட்டுகள் துகுறித்து பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் கிழக்குப் பகுதி தலைமை செயல் அதிகாரி மணிஷ் அகர்வால் "கிழக்கு இந்திய பகுதிகளில் இருந்து தான் இந்தியாவின் மொத்த விற்பனையில் 25 சதவீதம் விற்பனை வருவாய் வருகிறது.
ஆக இன்னும் கொஞ்சம் பிக் பசாரை அவுட் லெட்டுகளை வைத்தால் இன்னும் வருவாய் கூடுவதற்கான வாய்புகள் மிக அதிகமாக இருக்கிறது. அதனால் தான் இந்தியாவின் கிழக்கு பகுதியில் மட்டும் நல்ல வாடிக்கையாளர்கள் இருக்கக் கூடிய இடங்களில் 25 அவுட் லெட்டுகளை திறக்க இருக்கிறோம்" என்றார்.
இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் மேற்கு வங்கம், பிஹார், ஒடிசா ஆகிய இடங்களில் இருந்து வருவாய் அதிகமாகக் கிடைக்கிறது. கிழக்கு இந்தியப் பகுதிகளின் மொத்த வருவாயில் மேற்கு வங்கத்தின் இருந்து மட்டும் சுமார் 30 சதவிகிதம் வரை விற்பனை வருவாய் வருகிறதாம்.
கொல்கத்தா நகரத்தில் மட்டும் 7 - 8 கடைகளை திறக்க இருக்கிறார்களாம். சமீபத்தில் தான் பிக் பசார் கொல்கத்தாவில் தன் 17-வது கடையையும், மேற்குவங்கத்தின் தன் 30-வது கடையையும் திறந்தது.
ஒரு பிக் பசார் கடையின் கட்டமைப்புகளுக்கு மட்டும் ஒரு சதுர அடிக்கு சுமார் 2,000 ரூபாய் வரை செலவழிக்க இருக்கிறார்களாம். இதையும் மணீஷ் அகர்வால் உறுதி செய்திருக்கிறார்.