நவம்பர் 08, 2016 இரவு, மோடி பணமதிப்பிழப்பை அறிவித்தார். அறிவித்த நாள் முதல் நவம்பர் 25, 2016-ம் தேதி வரை 23 அரசு சேவைகளுக்கு பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்கள்.
அந்த 23 சேவைகளில் அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், விமான பயணச் சீட்டுகள், பால், மெட்ரோ ரயில், அரசுப் போக்குவரத்துப் பயணச் சீட்டுகள், ரயில் பயணச் சீட்டுகள் என சேவைகளின் பட்டியல் நீள்கிறது.
இதில் பெட்ரோல் பங்குகளில் தனியாரும் கை வைத்திருக்கும் இடம் என்பதால் இவர்களிடம் எத்தனை கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுக்கள் கொடுக்கப்பட்டது. அவர்கள் எவ்வளவு மதிப்பிலான ரூபாயை பழைய நோட்டுக்களாக நிர்வகித்தார்கள் என ஒருவர் ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
ஆர்டிஐ பதில்
இந்த ஆர்டிஐ பதிலில் "பெட்ரோல் பங்குகள் எவ்வளவு ரூபாய் வரையான பழைய நோட்டுக்களை கையாண்டார்கள் என்கிற கணக்கு மத்திய ரிசர்வ் வங்கி இடம் இல்லை. அதோடு மேலே சொன்ன 23 சேவைகளில் எவ்வளவு ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகள் புழங்கியது என்கிற தகவலும் ஆர்பிஐ-இடம் இல்லை. எனவே இனி இது போன்ற கேள்விகளை தயவு செய்து கேட்க வேண்டாம்" என வேண்டுகோள் உடன் பதில் அளித்திருக்கிறார்கள்.
ரத்து
நவம்பர் 25, 2016-க்குப் பிறகு மேலே சொன்ன 23 சேவைகளை 1000 ரூபாய் நோட்டுக்கள் நீங்கலாக பழைய 500 ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு மேற்கொள்ளலாம் எனச் சொன்னார்கள். ஆனால் அதுவும் டிசம்பர் 15, 2016 வரை மட்டுமே நீடித்தது.
அத்தனையும் போச்சு
டிசம்பர் 02, 2016-ம் தேதிக்குப் பின் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தி பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருளையோ, விமான பயணச் சீட்டுகளோ வாங்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்தது ஆர்பிஐ.
அந்த 99.3 %
இந்தியாவில் நடந்த பணமதிப்பிழப்பில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் 99.3 சதவிகித நோட்டுக்கள் மீண்டும் ஆர்பிஐ இடம் வந்து விட்டது. மீதமுள்ள 0.7 சதவிகிதம் தான் கறுப்புப் பணமாக இருக்கலாம் என ஒரு ஆரிக்கையே தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications