டெல்லி: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்களுக்கு இதுவரை பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் போடப்படவில்லையாம். இது மத்திய அரசின் டெலிகாம் நிறுவனம்.
தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தைடம் ஊழியர்களுக்கான சம்பளத்தை உடனடியாக கொடுக்குமாறு அமைச்சர் மனோஜ் சின்ஹாவிடம் ஊழியர்கள் சங்கம் முறையிட்டிருக்கிறதாம்.
கடந்த ஐந்து நிதி ஆண்டுகளாக பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர் நஷ்டத்திலேயே தான் போய்க் கொண்டிருக்கிறது.
8000 கோடியா..?
கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிகர நஷ்டம் 8,000 கோடி ரூபாய். அதற்கு முந்தைய 2016 - 17 நிதியாண்டில் 4,786 கோடி ரூபாயில் இருந்து இவ்வளவு நஷ்டம் அதிகரித்திருக்கிறது.
சம்பளம் எங்கே..?
பிப்ரவரி மாத சம்பளம் மட்டும் அல்ல, இனி வரும் பல மாதங்களின் சம்பளம் நிச்சயமாக தாமதமாக வாய்ப்புகள் அதிகம் என பிஎஸ்என்எல் உயர் அதிகாரிகள் சொல்லி வருகிறார்கள்.
சம்பளக் கணக்கு
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வரும் மொத்த வருவாயில் சுமார் 55 சதவிகிதம் ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவாகி விடுகிறதாம். ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு என எல்லாவற்றையும் கணக்கிட்டால், ஒவ்வொரு ஆண்டும் எட்டு சதவிகிதம் கூடுதலாக ஊழியர்களின் சம்பளத்துக்கு செலவாகிறதாம்.
வருவாய் அதிகரிக்கவில்லை
ஊழியர்களுக்கு தானாகே ஊழிய உயர்வு, படிக் காசு உயர்வு நடக்கும். ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பதிலலியே என பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிதி அதிகாரிகள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கடன்
பிஎஸ்என்எல் மட்டுமல்ல எல்லா தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களும் தங்களுக்கான முதல் தொகையை வருவாயில் இருந்து பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் கடன் வாங்கித் தான் நிறுவனத்தை நடத்துகிறார்கள். ஆக அது போல பிஎஸ்என்எல் நிறுவனமும் கடன் வாங்க முயற்சித்து வருகிறதாம். ஆனால் இதுவரை தொலைத் தொடர்பு அமைச்சகத்திடம் இருந்து அனுமதி வரவில்லையாம்.
சம்பளம் எப்போது
காஷ்மீர், ஒடிஸா, கேரளா, டெல்லி போன்ற பகுதிகளில் வருவாய் வர வர கொஞ்சம் கொஞ்சமாக சம்பளங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்களாம். இதே போல வருவாய் வர வர அனைத்து பிராந்திய ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள் டெலிகாம் துறை அதிகாரிகள்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications