இந்தியாவின் மிகப் பெரிய ஈ-வேலட் நிறுவனங்களில் ஒன்றான Paytm நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் சர்மா. இவரின் தனிப்பட்ட டேட்டாக்களை திருடிக் கொண்டு பணத்துக்காக மிரட்டினார் அதே Paytm நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவியில் இருந்த சோனியா தவான்.
இந்த விஷயம் கடந்த செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் விஷயம் வெளியே வர அக்டோபர் 23, 2018 அன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
இப்போது சுமார் ஐந்து மாத சிறைக்குப் பின் ஜாமினில் வெளியே வந்திருக்கிறாராம். ஜாமின் வழங்கும் போதே எந்த ஒரு குற்றப் பின்னனி இல்லை, இனி தலைமறைவு ஆகவும் வாய்ப்பில்லை, கொடுக்கும் ஜாமினை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பில்லை என்கிற விஷயங்களைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கி இருக்கிறதாம்.
குறிப்பாக, ஜாமீன் வாங்கி வெளியில் செல்லும் சோனியா எந்த ஒரு குற்றச் சம்பவங்களிலும் ஈடுபடக் கூடாது. சாட்சியங்களுக்கு அழுத்தம் கொடுத்தொ, மிரட்டியோம் பயமுறுத்தியோ அவர்களை தனக்கு சாதகமாக மாற்றம் செயல்களில் ஈடுபடக் கூடாது. குறிப்பிட்ட தேதிகள் முறையாக நீதிமன்றத்துக்கு வந்து வழக்கை சுமூகமாக நடத்த வழி வகை செய்ய வேண்டும். என குறிப்பிட்டு ஜாமீன் வழங்கி இருக்கிறார்கள்.
உயர் நீதிமன்றத்தில் தான் ஒரு அப்பவி என்றும், வலுவான் ஆதாரங்கள் இல்லாமல் தன் மீது இந்த குற்றம் சுமத்தப் பட்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். உயர் நீதிமன்றமும் சோனியாவின் வாதங்களை ஏற்றுக் கொண்டது. இப்போது வரை சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவர் மீது வழக்கை நடத்தி வருகிறார்கள் என்பதையும் நீதிமன்ற தரப்புகளில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.