டெல்லி: பிரதமரின் கிஷான் சம்மன் நிதி(Pradhan Mantri Kisan Samman Nidhi) திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேர் அளவுக்குள் சொந்த விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.
இப்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால் இந்த Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தின் கீழ் புதிதாக விவசாயிகளின் பெயர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என தடை விதித்திருக்கிறது.
அதோடு இதுவரை எவ்வளவு விவசாயிகளின் பெயர்கள் Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தின் கீழ் பயனாளர்களாக பட்டியலிடப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே முதல் தவணையான 2,000 ரூபாயைக் கொடுக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறது தேர்தல் ஆணையம்.
வாக்கு போய்விடுமோ
தேர்தலை மனதில் வைத்து தான் பாஜக அரசு தன் இடைக்கால பட்ஜெட்டில் இந்த Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது ஏழை எளிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய 2,000 ரூபாயைக் கொடுக்கவில்லை என்றால் தேர்தல் வெற்றி பாதிக்கப்படுமோ என கலக்கத்தில் இருக்கிறது பாஜக.
Pradhan Mantri Kisan Samman Nidhi
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 6000 தருவதாகச் சொன்ன மோடி அரசு அதை மூன்று தவணைகளாக கொடுக்க திட்டமிட்டது. இப்போது Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தின் முதல் தவணையான 2,000 ரூபாயையே நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளூக்கு சென்று சேராத வண்ணம் இப்போது முட்டுக் கட்டை போட்டிருப்பதை பாஜகவினர் கொஞ்சம் வருத்தத்தோடு தான் பார்க்கிறார்களாம்.
முதல் செட்
இந்த திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இப்போது, மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இத்திட்டத்தில் புதிதாக விவசாயிகளின் பெயர்களை சேர்ப்பது தேர்தல் நடத்தை விதிமீறலாகும் என்பதால் புதிய பயனாளிகளைச் சேர்க்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.
மொத்தமே 2 கோடி பேர்
இப்போது வரை முதல் முறையாக 1.01 கோடி பேருக்கு மட்டுமே பணத்தைக் கொடுத்திருக்கிறார்களாம். அதோடு இன்னொரு 1 கோடி விவசாயிகளின் பெயரைத் தான் மத்திய அரசு கையில் வைத்திருக்கிறதாம். ஆக மொத்தம் சுமார் 2.2 கோடி பேருக்கு மட்டுமே பணம் Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தின் கீழ் கொடுக்க முடியும் என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
பாக்கி தொகை
இதற்கு ஒதுக்கிய 20,000 கோடி ருபாயில் சுமார் 5,000 கோடி ரூபாய் போக மீதமுள்ள 15,000 கோடி ரூபாய் அரசாங்க கஜானாக்களிலேயே இருக்க வேண்டி இருக்கும் எனவும் நிதி அமைச்சகம் சொல்லி இருக்கிறார்கள்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications