மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது கடந்த 2013, 2016களில் இருந்ததைத் போல தற்போது உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு என்ன காரணம் என்று சாய்ஸ் புரோக்கிங்க் நிறுவனத்தின் அனலிஸ்ட் முருகேஷ்குமாரிடம் பேசியபோது அவர் கூறியதாவது.

குறிப்பாக ஐந்து காரணங்களினால் ரூபாயின் மதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. அவைகள்:
வரும் பாராளு மன்ற தேர்தலில், மத்தியில் பாரதிய கட்சியின் ஆட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் இந்தியாவில் தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள வலுவான வளர்ச்சி மற்றும் சேவை துறை சார்ந்த இன்டெக்ஸ் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவில் உயர்ந்துள்ளது.
கடந்த 3 பாரளுமன்ற தேர்தல் நேரங்களில் இல்லாத அளவுக்கு, இந்த முறை அன்னிய முதலீடுகள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கவில் டாலரின் மதிப்பு தொடந்து சரிவை சந்தித்து வருவதையடுத்து , பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி ஏற்கனவே நிர்ணயித்ததை போல கடந்த 2018ம் ஆண்டில் 4 முறை வட்டி விகிதத்தில் மாற்றம் (அதிகரித்தது) செய்தது. ஆனால் நடப்பு ஆண்டில் 2019- ஆம் ஆண்டில் ஏற்கனவே நிர்ணயித்ததைப் போல் அல்லாமல் இந்த வருடத்தில் எந்தவொரு மாற்றம் இருக்காது என்று அறிவித்துள்ளது.
வரும் வாரத்தில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மேலே ரூ.69.35, 70.90, கீழே ரூ.68.10, 67.50 என்ற நிலையிலேயே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications