டெல்லி: நாட்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வித விதமான புதிய அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தவே மக்கள் மிக விரும்புகின்றனர்.
இந்த மொபைல் உலகில் வரும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி முதல் 5 ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரவுள்ளன. சம்சங் மற்றும் எல்.ஜி நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி ஸ்மார்ட்போன்களை தயாரித்துள்ளன. அண்மையில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 (Galaxy S10) மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதில் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் தொழில்னுட்ப மாநாடுகளில் காட்சிப் படுத்தப்பட்டாலும் இன்னும் பொதுமக்கள் பயன் பாட்டிற்காக விற்பனையை தொடங்கவில்லை.

இந்த நிலையில் 5ஜி கேலக்ஸி எஸ்10 மாடல் ஸ்மார்ட்போனானது வரும் ஏப்ரல் மாதம் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் எல்.ஜி நிறுவனமும் 5ஜி வசதி கொண்ட வி50 மாடலை ஏப்ரல் மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைத் தொடர்பு துறையில் அடுத்த கட்ட வளர்ச்சி என்றால் அது 5ஜி தான் எனவே, 5ஜி தொழில் நுட்பமானது உரிய நேரத்தில் வருமா என்ற என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் இந்தியாவில் 5ஜி இணையதள சேவை இன்னும் அமலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications