வாஷிங்டன்: வாரா வாரம் அமெரிக்கா கச்சா எண்ணெய் இருப்பு குறித்த குறீயீடு ஒவ்வொரு வாரம் புதன் கிழமையன்று வெளியிடும். அதன் படி நேற்று (27-03- 2019) வெளியிடப்பட்ட அறிக்கையில். கடந்த வாரத்தை காட்டிலும் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கையிருப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது.
கடந்த வாரம் தேவையை விட - 1.1 மில்லியன் பேரல்கள் தேவை இருந்தது, ஆனால் நடப்பு வாரத்தில் தேவையை விட 2.8 மில்லியன் பேரல்கள் அதிகமாக இருப்பதாகவும் அந்த குறியீட்டின் மூலம் தெரிகிறது. ஆக நடப்பு வாரத்தில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் ஏற்றம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டாலும், அமெரிக்காவில் உற்பத்தி அதிகரிப்பாலும், அதேசமயம் சர்வதேச சந்தையில் தேவை குறைந்ததாலும் விலை சற்றே குறைந்தே வர்த்தகமாகி வருகிறது.
மேலும் அமெரிக்க பொருளாதாரத்தை அதிகரிக்கும் பொருட்டு பெடரல் ஓபன் மார்கெட் கமிட்டி நடப்பு ஆண்டில் ரெபோ விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று அறிவித்துள்ளது. இதனால் பெரிய அளவில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு ரூபாயின் மதிப்பில் பெரிய வீழ்ச்சி இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை வரும் வாரங்களில் பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், விலை சரிய வாய்பிருக்கிறது.
டாலரில் தற்போது 58.95 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இது 58 என்ற விலையை உடைக்கும் போது 56 டாலர் வரை சரிய வாய்பிருக்கிறது. மேலே சென்றாலும் 60 டாலருக்கு மேல் செல்ல வாய்ப்புகள் குறைவுதான் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
இந்திய கமாடிட்டி வர்த்தகத்தை பொறுத்தவரையில் 4080ஐ உடைத்தால் , 4041, 4007 என்ற நிலையிலும், மேலே சென்றால் ரூ.4120, 4164 என்ற நிலையிலும் வர்த்தகமாகலாம். இந்திய மார்கெட்டிலோ, அமெரிக்க வர்த்தகத்திலோ விலையில் மாற்றம் இருந்தாலும், இது பெட்ரோல் டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதே உண்மை.