வாஷிங்டன்: ஆன்டிராய்டு மொபைல்களில் ஆப்களை பதிவிறக்கம் செய்யகூகுள் பிளே ஸ்டோரைத்தான் அனைவரும்பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் கூகுள்பிளே 200க்கும் அதிகமான ஆப்களை அகற்றியுள்ளது.
தற்போதைய காலத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பலவிதமான பிரச்சனைகள் வருவதாக பல ஆய்வுகள் சொன்னாலும்,அவற்றை நம்மால் நம்பமுடிவதில்லை. ஆனால் தற்போது இணைய உலகின் அரசன் கூகுள் நிறுவனமேபிளே ஸ்டோரில் இருந்து 200 ஆப்களை அகற்றியுள்ளது , பலவிதமான கேள்விக்குறிகள் மனதில் எழுகின்றன.
இந்த ஆப்கள் அகற்றம் பற்றிஅந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் நடந்த ஆய்வறிக்கையில் மோசமான200 ஆப்கள்அகற்றப்பட்டன. இந்த சோதனை சிம்பேடுஎன்றும் கூறப்பட்டது. இந்த மோசடி ஆப்கள்இதுவரை 150 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது இந்த ஆய்வின் மூலம்தெரிய வந்துள்ளது.
தகவல்களை எடுத்துக் கொள்ளும்
இந்த ஆப்களை ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்தால் போனில் உள்ள தனிப்பட்டநபர்களின் தகவல்கள் பதிவிறக்கம் செய்ய வாய்ப்புள்ளது. மேலும் பல மோசமான வைரஸ்களை இதன் மூலம் பரப்பி போன்களைஉபயோகப்படுத்த இயலாத அளவுக்கு செய்கின்றன.
மோசமான வைரஸ்
இந்த மோசமான வைரஸ்கள் நிரம்பிய ஆப்களை நமது ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம்செய்யும் போதும், அந்த ஆப்களை உபயோகப்படுத்தும்போதும் பல கதிர்வீச்சுகளை வெளிப்படுத்துகின்றன. இதனால் ஸ்மார்போனை உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களின் உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது.
எச்சரிக்கையாக இருங்கள்
இதுவரை எப்படியோ இனியாவது ஒரு ஆப்பை டவுன்லோடு செய்யும் போது அதன் பயன் என்ன? இது எதற்காக டவுன்லோடு செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள், மேலும் இந்த ஆப்களை டவுன்லோடு செய்து விட்டாலே அடிக்கடி நோட்டிபிகேஷன் வரும். இந்த நோட்டிபிகேஷன்எ ன்ன என்று பார்க்க ஓபன் செய்யும் போது அதில்உள்ள வைரஸ்களை வைத்து உங்களது போன்களை டிரேஷ் செய்ய முடியும். இதனால் நமது தகவல் பரிமாற்றங்கள் பரிமாற வாய்ப்புகள் உள்ளன.
அதென்ன மால்வேர்கள்
மால்வேர்கள் என்பது நமக்கு தீங்கு விளைவிக்க நோக்கத்திற்காக உருவாக்கப்படுபவை. நாம் இவற்றை வேண்டாம்என்று தடுக்க நினைத்தாலும் நமக்கு இவை வேறொரு வகையில் தீங்கு விளைவிக்கின்றன. இது முன்னர் சிஸ்டம்களில் பெரிய அளவில் இருந்து வந்தன. ஆனால் தற்ப்பொதைய காலத்தில் ஸ்மார்ட்போன்களிலும் வர ஆரம்பித்து விட்டன. இந்த மால்வேர்கள் குறிப்பாக நாம் நமது போனில்ஆப்களை பதிவிறக்கம் செய்வதால் உள்ளே வருகின்றன.
கேம்களில்
குறிப்பாகபிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யப்படும் கேம்களில் இந்த மால்வேர்கள் அதிகம் காணப்படுவதாக ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. பெரியவர் முதல் சிறியவர் வரைஇந்த கேகளின் மூலம் இதற்கு அடிமையாவதைகண்கூட நாம் காண முடிகிறது. சமீபத்தில் ஒரு கேமில் என்னசொன்னாலும் செய்யும் அளவுக்கு போய் இதனால் பலஉயிர்கள் போனதை கண் முன்னேநிறுத்துகின்றன. ஆகமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications