டெல்லி: மத்தியில் நடைபெற்று கொண்டிருக்கும் மோடிஅரசினால் ஐந்து வருடங்களில் நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 144 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. 2004 முதல் 2014 வரையிலான10- த்து ஆண்டுகளில் 138 மில்லியன்டன்களாக இருந்தது 5% அதிகரித்து 144 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
உள் நாட்டில் சப்ளை செய்த நிலக்கரியில் 90% கிட்டத்தட்ட , 462 மில்லியன் டன் நிலக்கரியில் மோடி ஆட்சியில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் குறிப்பாக 2018 - 2019 ஆம் ஆண்டில் மட்டும் 607 மில்லியன் டன்களாக உற்பத்தி இருந்தது என நிலக்கரி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2004 - 2005 ல் நிலக்கரி உற்பத்தி 324 மில்லியன் டன்னாக இருந்தது. இதுவே மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும் 2008 - 2009ல் 404 மில்லியன்டன்னாக அதிகரித்தது. அடுத்த 5 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் 607 மில்லியன் டன்னாகவும் அதிகரித்துள்ளது.
சுமூக உறவு
நிலக்கரி உற்பத்தி துறைக்கும் ரயில்வே துறைக்கும் இடையே நிலவும் சுமூகநிலையின் காரணமாக அதிக உற்பத்தி செய்தாலும், அதை போக்குவரத்து மூலம் மற்ற மாநிலங்களுக்கோ நிறுவனங்களுக்கோ அனுப்புவதில் முக்கிய பங்கு ரயில்வே துறைக்குஉண்டு. இந்தஅதிரடியான சேவை கூட நிலக்கரிஉற்பத்திற்கு மிகப் பெரிய பங்களிப்பாகும்.
வழிகாட்டுதல்
தலைமையிடத்தில் சரியானதொரு வழிகாட்டுதல் இல்லையெனில் இது சாத்தியமில்லை. குறிப்பாக ரயில்வே துறைக்கும் நிலக்கரி துறைக்கும் இருந்த சுமூக உறவு மின்சார ஆலைகளுக்கும் மற்ற நுகர்வோர்களுக்கும் அனுப்புவதில் ஒற்றுமையில்லையெனில் இது சாத்தியமில்லை. மேலும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பங்கும் இதில் உள்ளது.
பெரும் பங்கு
என்னதான் மற்ற துறைகள் இதிக் சம்பந்தப்பட்டிருந்தாலும் ஊழியர்களின் பங்கேபெரும் பங்காகும், குறிப்பாக சுரங்க தொழிலாளர்கள், அவர்களைவழி நடத்தி செல்லும் சுரங்கநிறுவனங்கள், அதன் அதிகாரிகள் எனபலரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். இதற்காக அவர்களைஊக்குவிக்கும் வகையில் அரசு சம்பளத்தையும், கிராஜ்சுவிட்டிபணத்தை செலுத்தும் வகையில் கவனம் செலுத்தி வருகிறது.
பற்றாக்குறை போகவில்லை
நிலக்கரி மூலமாக உற்பத்தி செயல்படும்மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், தற்போது இந்த மின் உற்பத்திநிலையங்கள் நிலக்கரி பற்றாக்குறையே நிலவி வருகிறது என்றும் மத்திய மின்சார துறைகூறியுள்ளது.