டெல்லி: புதிய நிதியாண்டான ஏப்ரல் 1 முதல் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே மாற்றப்பட்ட ரியல் எஸ்டேட் ஜிஎஸ்டிவிகிதங்களும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
வருமானவரித்துறை முன்பை விட பலநுணுக்கமான கண்காணிப்பைத் தொடங்குகிறது. இதற்காக பிரத்யோக வசதிகளைக் கொண்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான புராஜக்ட் இன்சைட் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படுள்ளது.
இதன் மூலம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் பற்றி தெரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும். இதன் மூலம் சமூக வலைதளங்கள் கண்கானிக்கபடும்.
ஆதார் - பான் கார்டு இணைப்பு
ஆதார் பான் கார்டு இணைப்புக்கு நேற்றே கடைசி நாள் என்று அறிவித்திருந்த நிலையில், செப்டம்பர் வரை அதிகரித்ததோடு இனி ஆதார் பான் எண்னை இணைப்பது கட்டாயம் எனவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் வருமான வரி தாக்கலின்போது ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முடியும்.
ரியல் எஸ்டேட் தொழில்
புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு ஜிஎஸ்டி 12%லிருந்து 5% ஆகவும், குறைந்த விலை வீடுகளுக்கு 1% ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. ஆக ஏப்ரல் 1 முதல் வீடு கட்டுபவர்கள் பணியை தொடங்கினால் குறைவானஜிஎஸ்டியே விதிக்கப்படும் என்று வருமான வரித்துறைஅறிக்கையில் வெளியிட்டுள்ளது.
கார்களின் நிலை
கார்களின் விலை சாற்றே உயரும் என்றாலும், மகேந்திரா, டொயோட்டா, டாட்டா மோட்டார்ஸ் போன்ற பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே ஏப்ரல் - 1 முதல் விலை உயர்த்தப்படு ம்என்று அறிவித்திருந்தன. இதற்கு உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதால் விலை அதிகரிப்பதாகவும் கூறியுள்ளன. ஆனால் இந்த விலை உயர்வு விற்பனையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.
விதிகள்
பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்களின் காகித ஆவணபங்குகள் டீமேட் எனப்படும் மின்னணு ஆவண நடைமுறையில் மாற்றப்படும் என செபி அறிவித்துள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications