ஈரோடு: நெருங்கி வரும் கோடைகால விடுமுறையை அடுத்து ஜவுளி விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள் காத்திருந்த நிலையில், மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் ஆணைய கெடுபிடிகளால் ஈரோடு கனி ஜவுளி சந்தையில் விற்பனை மிகவும் குறைந்துள்ளது.
வரும் ஏப்ரல் 18 -ம்தேதி நடக்கவிருக்கும் தேர்தலையடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா செய்வது தடுக்கும் வகையில், ரூ. 50,000 மேல் சரியான ஆதாரம் இல்லாமல் கொண்டு சென்றால் அவை தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் பணத்தையும் அரசு கருவூலத்தில் வைக்கப்படும். இதனால் வணிகர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த பணத்தை தேர்தல் முடிந்து அரசு கருவூலத்தில் சரியான ஆதாரத்தை காட்டி பெற்றுக்கொள்ளலாம் என ஆணையம் தெரிவித்துள்ளது.
வியாபாரிகள் கோரிக்கை
இது குறித்து ஈரோடு கனி மார்க்கெட்டில்உள்ள ஜவுளி சந்தை சங்கதலைவர் கே. செல்வராஜ் கூறுகையில், வியாபாரிகள் வங்கியில் பணம் கட்ட ரசிதுடன் எடுத்து சென்றால் கூட, இந்த பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்கும் நிலை நிலவி வருகிறது. அதே பணம் எடுத்துவரும் போது உடனே வங்கி பாஸ் புக்கில் பதிவு செய்ய இயலதில்லை. இதனால் பணத்திற்கு கணக்கும் காட்ட முடிவதில்லை. ஆக வணிகர்கள் என்று ஆதாரத்தை காட்டினால் விட்டு விடவும் , இந்த வியாபாரிகளுக்கு 5 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதி வழங்கவேண்டும்.
பிசி சந்தை
கனி ஜவுளித் சந்தை திங்கள் கிழமை இரவு தொடங்கிசெவ்வாய் கிழமை மதியம் முடியும். மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை என மாநிலத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து வரும் மக்களும், வியாபாரிகளும், ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்டமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் இங்குவந்து செல்கின்றனர்.
பறக்கும் படையால் பறிமுதல்
இங்கு வரும் வியாபாரிகள் கொண்டு வரும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நாளிலிருந்து இந்த கெடு பிடிகளால் சந்தை முடங்கியது. சந்தையில் இருப்பு வைக்கப்படும் ஜவுளி ராகங்களில் பாதியளவாவது விற்பனை இருக்கும். ஆனால் கடந்த சில வாரங்களாக 15 % மட்டுமே விற்பனை நடந்துள்ளது.
பருத்தி ஆடைகள் தேக்கம்
தற்போது கோடைகால ஆடைகள் (பருத்தி ஆடைகள் ) வாங்கி குவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது70 % ஆடைகள் தேங்கியுள்ளன. இன்னும் தேர்தல் முடியும் வரை இதே நிலை நிலவி வந்தால் வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் மிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். மேலும் கோடை காலத்திற்கு இறக்குமதி செய்யப்பட பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் தேங்கியுள்ள நிலைஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளனர்.
பேரம்பேசி வாங்கலாம்
கனி ஜவுளி சந்தையை பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட விலையிலிருந்து பேரம் பேசி வாங்கமுடியும். இது மொத்தமாக வாங்கும்போது மட்டுமே சாத்தியம். எனவே அரசு இது சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications