டெல்லி: நடப்பு நிதியாண்டில் அதிகமான நுகர்வுத்திறன் இந்தியாவின் வளர்ச்சி 7.2 % அதிகரிக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி அதன் அறிக்கையில் வெளியிட்டுள்ளன.
கடந்த 2017 7 % இருந்த வளர்ச்சி 2018 ல் 7.2 % இருந்தது. கடந்த ஆண்டு நிலவிய வறட்சியின் காரணமாக விவசாய உற்பத்தி வெகுவாக குறைந்தது. மேலும் உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்ததும் ஒரு காரணமே. இந்திய அரசு எதிர்பார்த்த விலையை விட மிக இது அதிகமாக இருந்ததும் ஒரு காரணமே என்று ஆசிய அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
இது 2018 ல் 7.2% சதவிகிதமும், 2020 ல் 7.3 % சதவிகிதமாகவும் இருக்கும். இது மெதுவான வளர்ச்சி என்றாலும் அதிகரித்தே காணப்படும். பெடரல் கமிட்டியின் வட்டி விகிதம், விவசாய உற்பத்தி, அதன் தேவையம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 5% சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்றும் அந்த அறிக்கைகள் கூறுகின்றன.
ஏற்றுமதி குறையும்
அதேசமயம் ஏற்றுமதி குறைவதால் இந்திய பொருளாதாரம் பாதிக்கலாம். ஆனால் வலுவான உள்நாட்டு தேவை இதை சரிசெய்யும் என்கின்றனர் வல்லுநர்கள். இதனால் வருமானம் உயர்வு ஏற்படும் என்றும், இதன் மூலம் பணவீக்கம் கட்டுக்குள் வரும். இதனால் பணபரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் பொருளாதாரமும் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கைகள் கூறுகின்றன.
மெதுவான வளர்ச்சி
2019 - ம் ஆண்டு ஏற்றுமதி குறைந்தாலும், 2020 - ல் மெதுவாக வளர்சசியடையும் என்றும், இதன் காரணம் உலகளாவிய ஏற்றுமதி திறன் பாதியளவாவது அதிகரிக்கும் என்றும், உலக சுற்று சுழலும் அதைக்கேற்றவாறு அமையும் என்றும் இந்த அறிக்கைகள் மூலம் தெரிகிறது.
உலக அளவில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தினால் ஏற்றுமதி குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்றுமதியை குறைத்தாலும் உள்நாட்டு தேவையும், வர்த்தகமும் இதை சரி செய்யும் என்கின்றனர் உள்நாட்டு வல்லுநர்கள்.