டெல்லி: பிளிப்கார்ட், அமேசான், ஓயோ என இந்த ஆண்டு இந்தியாவில் வேலை செய்ய ஏற்ற மிகச்சிறந்த 25 நிறுவனங்களின் பட்டியலை வணிகம் மற்றும் வேலை வாய்ப்பு தேடுதல் சமுக வலைத்தளமான லின்கிடுஇன் வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் பட்டியலானது நிறுவனம், ஊழியர்கள் மற்றும் நிறுவனத்துடனான பிணைவு, வேலை வாய்ப்பு, ஊழியர்கள் பெறும் நன்மைகள் போன்றவற்றை வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நாடு முழுவதிலும் உள்ள 54 மில்லியன் பயனர்களிடமிருந்த பெற்ற தரவுகளை வைத்து லிங்கிடுஇன் சமூக வலைத்தளம் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
லிங்கிடுஇன் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் 12 நிறுவனங்கள் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களாகவும், தகவல் தொழில் நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்களாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபிளிப்கார்ட்
இந்தியாவின் மிக பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் வேலை செய்ய பலரும் விரும்புகின்றனர். இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது பிளிப்கார்ட்.
இந்தியாவில் பெங்களூரு, டெல்லியில் அலுவலகங்கள் உள்ளன. கடந்த இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து இந்த ஆண்டு முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அமேசான்
உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் மற்றும் இணையதள வணிக நிறுவனமான அமேசான் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் என்ற பெயரினை பெற்றுள்ளது. அமேசானில் உலகம் முழுவதும் 5,66,000 நபர்கள் பணிபுரிகின்றனர். இ-காம்ர்ஸ், அலெக்ஸா, எக்கோ ஸ்பீக்கர், அமேசான் பிரைம் வீடியோஸ் எனப் பல்வேறு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஊழியர்கள் தங்களது துணைவிக்குப் பெற்றோர் கடமைக்கான விடுமுறை இல்லை என்றால் தனக்கு உள்ள விடுமுறையினை 6 வாரங்கள் வரை அவருக்கு அளிக்க அனுமதி அளிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் கற்ப காலத்தில் தங்களது விருப்பான நேரத்தில் பணிபுரிய மற்றும் குறைவான வேலை நேரங்களில் மட்டும் பணிபுரிய எல்லாம் அனுமதி அளிக்கிறது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பையில் அமேசானுக்கு அலுவலகங்கள் உள்ளன. கடந்த ஆண்டு நான்காவது இடத்தில் இருந்த அமேசான் இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஓயோவின் விருந்தோம்பல்
விருந்தோம்பல் ஹாஸ்பிட்டலிட்டி நிறுவனமான ஓயோ ரூம்ஸ் நாடு முழுவதிலும் குறைந்த விலையில் பட்ஜெட் ஹோட்டெல் சேவையினை வழங்கி வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் 2,700 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறனர். 2011ஆம் ஆண்டு ரித்தேஷ் அகர்வால் என்பவரால் குர்காமை தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. இந்திய அளவில் சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.ஒன்97 கம்யுனிகேஷன்ஸ் பேடிஎம் | வணிகம்: இ-காமர்ஸ், இணையதள சேவைகள் | அலுவலகம்: சென்னை, பெங்களூரூ, மும்பை, புனே, கொல்கத்தா
ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் என்பதை விடப் பேடிஎம் என்றால் தான் அனைவருக்கும் இந்த நிறுவனத்தினைப் பற்றித் தெரியவரும், இந்திய வாலெட் நிறுவனமான இது வாட்ஸ் ஆஒ மற்றும் கூகுள் டேஜ் போன்ற செயலிகளிடம் பெரும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. இங்கு 17,000 நபர்களுக்கும் அதிகமாகப் பணிபுரிகின்றனர். இங்குப் பணிபுரியும் ஊழியர்கள் சிறப்பாகச் செயல்படும் போது அவர்களுக்குப் பங்குகள் அளிக்கப்படும். கடந்த ஆண்டு இந்தப் பங்குகளை விற்ற ஊழியர்கள் தற்போது லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் உள்ளனர்.சென்னை, பெங்களூரூ, மும்பை, புனே, கொல்கத்தாவில் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
உபர், ஸ்விக்கி, டிசிஎஸ், ஜோமாடோ
மொபைல் செயலி டாக்ஸி சேவை நிறுவனமான உபர் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. சென்னை, பெங்களூரு, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இதேபோல இணைய தள வாடிக்கையாளர் சேவை நிறுவனமாக ஸ்விக்கி வேலை செய்ய சிறந்த நிறுவனமாக 6வதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் செயல்படுகின்றன. தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டிசிஎஸ் வாடிக்கையாளர் சேவை நிறுவனமான ஜோமாடோ ஆகியவை இந்த பட்டியலில் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. குர்கானை தலைமையிடமாக கொண்டு 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜோமாடோவிற்கு பெங்களூரு, சென்னை, டெல்லியில் அலுவலகங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 24 நாடுகளில் 55 மில்லியன் வாடிக்கையாளர்கள் இதன் சேவையை பயன்படுத்துகின்றனர். 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.ஆல்பாபெட் (கூகுள்) | வணிகம்: இணையதளம் | அலுவலகம்: பெங்களூரு, குர்கான், ஹைதராபாத், மும்பை
கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பாபெட். இணையதள விளம்பரத்தில் முக்கியமான நிறுவனமாக இது உள்ளது. இந்தியாவில் அன்மையில் டேஜ் செயலியை அறிமுகம் செய்தது மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் இலவச வைஃபை சேவை அளிக்கும் திட்டத்தினை அறிமுகம் செய்து வருகிறது. பெங்களூரு, குர்கான், ஹைதராபாத், மும்பையில் இந்த நிறுவனத்திற்கு அலுவலகங்கள் உள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குக் கடந்த 40 ஆண்டுகளாகத் தோல்வியே இல்லை என்று கூறலாம். தொட்ட தொழில் எல்லாம் லாபம் அளித்துள்ளது. முக்கிய வணிகமாகப் பெட்ரோலியமும், தற்போது ஆரம்பித்த ஜியோவும் உள்ளது. 34,120 ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் அவர்களுக்குக் கால் பந்து, கிரிக்கெட் விளையாட மைதானங்கள், எல்ஈடி ஸ்கோர்போர்டு, டென்னிஸ் மற்றும் பாஸ்கெட் பால் மைதானங்கள் போன்றவற்றை எல்லாம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு 24வது இடத்தில் இருந்த இந்த நிறுவனம் பத்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
EY எர்ன்ஸ்ட் அண்ட் யங்
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கணக்கு தணிக்கையியல் நிறுவனமான ஈஒய் எனப்படும் எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனம் உலகின் டாப் 4 கணக்கு தணிக்கையியல் நிறுவனங்களில் ஒன்றாகும். இங்கு உலகம் முழுவதும் 2,50,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம் சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.
அடோப்
அடோப் நிறுவனம் அக்டோபட், போட்டோஷாப், பிரீமியர் போன்ற மென்பொருள்களுக்குப் பிரபலமானது. இந்தியாவில் இருபாலினருக்கும் சமமான சம்பளத்தினை அளித்து வருகிறது. உலகம் முழுவது 18,000 ஊழியர்கள் அடோபில் பணிபுரிந்து வருகின்றனர். 26 நாட்கள் மகப்பேறு விடுமுறை, 16 வாரம் பெற்றோர் விடுப்பு மற்றும் 20 நாட்கள் வரை இறுதிச் சடங்குகளுக்கான விடுப்பு போன்றவற்றை அடோப் அளிக்கிறது. ஊழியர்கள் உடலளவில், மனதளவில் பணிக்குத் தயாராகுவதற்கு ஏற்ற அளவில் விடுமுறையினை அளிப்பதில் அடோப் நிறுவனம் முதன்மை வகிக்கின்றது.
இன்னும் என்னென்ன
மேலாண்மை ஆலோசனைகள் வழங்கும் பாஸ்டன் கன்சல்டிங் குழுமம், தனியார் வங்கியான யெஸ் வங்கி, தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஐடி சேவைகளை வழங்கும் ஐபிஎம், ஆட்டோமோட்டிவ் நிறுவனமான டெய்ம்லர் ஏஜி தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐ.டி சேவைகளை வழங்கும் ஃப்ரெஷ்வொர்க்ஸ், அக்சன்சர் போன்றவையும் இந்த பட்டியலில் இணைந்துள்ளன.
ஓலா
மொபைல் செயலி டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா உலகின் மிகவும் மதிப்பு வாய்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஃபுட் பாண்டா நிறுவனத்தினை அன்மையில் வாங்கியது மட்டும் இல்லாமல் ஆஸ்திராலியாவிலும் தனது டாக்ஸி சேவையினை அளிக்கத் துவங்கியுள்ளது. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணி செய்கின்றனர்.
PwC இந்தியா, கேபிஎம்ஜி இந்தியா
சத்யம், நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களின் மோசடிகளுக்குத் துணை போனதாக இந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு இருந்தாலும் உலகின் மிக முக்கியமான மேலாண்மை ஆலோசனைகள் நிறுவனத்தில் ஒன்றாக PwC உள்ளது. கேபிஎம்ஜி இந்தியா கேபிஎம்ஜி இந்தியாவும் ஒரு நிர்வாகக் கன்சல்டிங் நிறுவனம் ஆகும். ரிஸ்க் மேனேஜ்மெண்ட் மற்றும் பிற ஆடிட்டிங் சேவையில் இந்தியாவின் முதன்மையான நிறுவனம் ஆக உள்ளது.
லர்சன் அன் டூப்ரோ, ஆரக்கிள்
கட்டுமான நிறுவனமான லார்சன் அன் டூப்ரோ, ஐடி தகவல் தொழில் நுட்ப சேவைகளை வழங்கும் ஆரக்கில், வயர்லெஸ் நிறுவனமான குவால்காமும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 25 நிறுவனங்களில் 12 நிறுவனங்கள் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களாகவும், தகவல் தொழில் நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்களாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.