வாஷிங்டன்: அமரிக்கா - சீனாவுடனான வர்த்தகம் பெருகி வந்த நிலையில், தற்போது அமெரிக்காவும் சீனாவுக்கும் இடையே வர்த்தக உடன் படிக்கை ஏற்படுத்திக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இது குறித்து கடந்த வியாழனன்று (ஏப்ரல் 4, 2019) அன்று வெளிடப்பட்ட அறிக்கையில் இன்னும் 4 வாரங்களுக்குள் அமெரிக்கா - சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு விடும் என்று அறிவித்துள்ளது.
அமெரிக்கா சீனாவுடனான வர்த்தக பந்தம் இரு நாடுகளிடையே ஒரு பொருளாதார பந்தத்தை உருவாக்குவதுடன், இது உலக பொருளாதாரத்திலும் முக்கிய பங்காக இருக்கும். மேலும் இந்த ஒப்பந்த வர்த்தகம் இரு தரப்பினரிடையே ஒரு நம்பிக்கையை உருவாக்கும் என்றும் பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
சீன துணை பிரதமர் லியூ ஹிவுடன் வெள்ளி மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான விஷயங்களை பற்றி இருந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள உடன் படிக்கைக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.
இதுகுறித்து அமெரிக்கா கூறுகையில் நாங்கள் நாங்கள் ஒப்பந்தம் செய்ய மிக நெருக்கமாகி வருகிறோம். ஆனால் இதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று அர்த்தமில்லை. ஆனால் நிச்சயமாக ஒப்பந்தம் செய்வோம் என்றார் டிரம்ப்.அதுவும் அடுத்து நாங்கு வாரத்திற்கு உள்ளாகவே இந்த ஒப்பந்தங்கள் ரெடியாக வாய்ப்புள்ளது என்றும் இந்த அறிக்கையின் மூலம் நாம் அறிய முடிகிறது.
சுமூகமான பேச்சுவார்த்தை
ஏற்கனவே சீனா இது குறித்து பேசுகையில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை மிக நன்றாகவே போயிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டுமார்ச்மாதத்தில்சீனாவிலிருந்துஇறக்குமதிசெய்யபடும்எஃகுமற்றும்அலுமினியம்மீதுஅதிகப்படியானவரியைசெலுத்தியதால்உலகவர்த்தகயுத்தத்தில்அச்சத்தைதூண்டிவிட்டபொருளாதாரயுத்தமாகஇருந்தது. மு அதே சமயம் டிரம்ப் சீன பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வரியை 25% மாக குறைத்தார். இது அமெரிக்கா சீனாவுடனான வர்த்தகத்திற்கு பெரும் பங்கு வகித்தது.
உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்
இது உலக நாடுகளிடையே பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுனர்களிடையே ஒரு நம்பிக்கை வலுப்படுத்தியுள்ளது. ஏனெனில் பொருளாதாரத்தில் மிக முக்கிய நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் ஒப்பந்தம் செய்கையில் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள இந்த நாடுகள் மேலும் வளர்ச்சி அடைந்து உலக வர்த்தகத்தையே தங்களது கைக்குள் வைத்துக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
பங்கு சந்தையில் பெரிய மாற்றம் இருக்கும்
இதனால் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் என்பது எந்த அளவுக்கு வளர்ச்சி அடையும் என்று யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. மேலும் உலக பங்கு வர்த்தகத்தில் இதன் மாற்றம் எதிரொலி எப்படி இருக்கும் என்று ஊகத்திலேயே பங்கு சந்தைகள் வர்த்தகமாகி வருகின்றன. மேலும் என்று இருந்தாலும் பங்கு சந்தையில் மிகப் பெரிய ஏற்ற இறக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமூக உறவுக்கு ஒப்பந்தமே சாட்சி
அமெரிக்காசீனாவுடனானநீண்டகாலவர்த்தகத்தில்ஈடுபடுபோவதாகவும், இந்தவிஷயத்தில்ஏதும்தவறுநேராதுஎன்றும், அறிவார்ந்தசேவைகளில்எந்தபாதிப்பும்இருக்காதுஎன்றும்கூறியுள்ளார். உள்ளது. இதற்கு சாட்சியாகவே இந்த ஒப்பந்தம் அமையும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா சீனா பொருளாதாரம் எதிர்பாராத அளவில் இருக்கும் என்றும் தெரிகிறது.