மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு எந்தவொரு நிறுவனமும் முன்வராத நிலையில் அதற்கான மாற்றுத் திட்டம் என்ன என்றும், மாற்றுத் திட்டத்தையும் அளித்து வருகின்றன.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கனவே பல நிதி நெருக்கடியில் உள்ளது அனைவரும் அறிந்தது. இது தற்போது எஸ்.பி.ஐ தலைமையிலான வங்கிக் குழுவின் கட்டுப் பாட்டில் இருப்பது அனைவரும் அறிந்ததே.

இத்திட்டத்தில் பங்குகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்களான டிஜிபி, மற்றும் இன்டிகோ பார்ட்னர்ஸ் மற்றும் அரசு சார்ந்த தேசிய முதலீட்டு மற்றும் கட்டமைப்பு நிதியம் ஆகியன இணைந்து நிறுவனத்தை ஏற்று நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. அதே சமயம் வங்கி குழுவானது டெல்டா ஏர்லைன்ஸ, ஏர் பிரான்ஸ் நிறுவனமான கேஎல்எம் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்த விருப்பம் குறித்தும் ஆராய்ந்து வருகின்றன.
இது தவிர தனியார் முதலீட்டு நிதியமான பிளாக்ஸ்டோன் நிறுவனத்திடம் ஜெட் நிறுவனத்தின் லாய்டி திட்டம் குறித்தும் ஆய்வு செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது. அதாவது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் சீரடைந்த பிறகு , இந்த திட்டம் மூலம் நிதி திரட்ட முடியுமா என்பதை பிளாக்ஸ்டோன் ஆராயும்.
மேலும் அடுத்த 6 மாதங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து செயல்படுத்த பட வேண்டும் என்பதையே கடன் வழங்கிய வங்கிகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. அதற்கேற்ப தொடர்ந்து செயல்படுவதற்கான முதலீடுகள் கிடைக்கச் செய்வது, இத்துறை வல்லுனர்களை இக்குழுவில் இணைக்கச் செய்வது , கால வரையரையுடன் கூடிய லாப நோக்கத்தை வகுப்பது தற்போதைய முக்கிய நோக்கமாகவே உள்ளது.
அதே சமயம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நடத்த விரும்பும் நிறுவனங்களிடமிருந்து மனுக்களை எஸ்.பி.ஐ தலைமையிலான வங்கிக் குழு பெற்று வருகிறது. இதற்கான கால அவகாசமும் ஏப்ரல் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிபி தலைமையிலான குழு ஜெட் ஏர்வேஸ்ஸை நடத்துவதற்கான விருப்ப நிபந்தனைகளையும் அதில் உள்ள சவாலான நடப்பு பிரச்சனைகளையும் ஆராய்ந்து வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications