மும்பை: நடக்கவிருக்கும் நாடளுமன்ற தேர்தலில் பல போட்டியாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இதில் குறிப்பாக பாரதிய ஜனத கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் மந்திரி பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் போட்டியிடுகிரார்.
இவர் தக்கல் செய்த வேட்பு மனுவில் தன்னுடைய சொத்தின் மதிப்பு ரூ.2 1/4 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். இதுவே இவர் கடந்த தேர்தலில் வேட்பு மனுவில் ரூ.108 கோடி என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வட மத்திய மும்பை நாடுளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முன்னாள் எம்.பி பூனம் மாகஜன் போட்டியிடுகிறார். இவர் மறைந்த மத்திய மந்திரி பிரமோத் மாகாஜனின் மகள் ஆவார்.
பூனம் மகாஜன் வேட்பு மனுவில் தனக்கு 2 1/4 கோடி மட்டுமே சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளர். இதுவே இவர் கடந்த தேர்தலில் ரூ 108 கொடு என்று தாக்கல் செய்திருந்தார். வழக்கமாக அரசியல் வாதிகளின் சொத்து மதிப்பு ஏறிக் கொண்டு தான் போகும் ஆனால் இவரின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.

அதுவும் ஒரு எம்.பியின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. மேலும் 5 வருடங்களுக்கும் 100 கோடி ரூபாய் குறைந்துள்ளது நம்ப முடியாத விஷயமாக உள்ளது. மக்கள் மத்த்யில் ஒரு சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூனம் மகாஜனிடம் இது பற்றி கேட்ட போது தனது கையிருப்பு வெரும் ரூ.75 ஆயிரம் தான் உள்ளதாகவும், தனது கணவரிடம் ரூ.29,650 இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயமென்னவெனில் கடந்த வேட்பு மனுவில் 2 ஆடி கார்கள் இருந்த கூறியிருந்த இவர் தற்போது ரூ.11 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா கார் மட்டுமே உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் எனது கணவர் ஆட்டோமொபைல் தொழில் செய்து வருகிறார். அந்த தொழில் அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக சொத்துகளை விற்று கடனை அடைத்து விட்டோம். தற்போது எங்களின் கையில் இருப்பது இன்சூரன்ஸ் பாலிசிகள் மட்டுமே என்றும் கூறியுள்ளார்.
பதவியில் இல்லாத அரசியல் வாதிகளே பல்லாயிரம் கோடிகளூக்கு அதிபதியாக உள்ள நிலையில் இவர் சொல்வது நம்பும் படியாக இல்லை என்பதே மக்களின் கருத்தாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications