டெல்லி: வங்கிக் கடன் புகழ் விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பே எம்மா அர்புத் நாட் என்கிற நீதிபதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினார்.
ஆனால் இங்கிலாந்து சட்ட நடைமுறைப்படி ஒருவருக்கு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முழு உரிமை இருப்பதால் விஜய் மல்லையாவும் மேல் முறையீடு செய்யலாம் எனச் சொன்னது தான் தாமதம், விஜய் மல்லையா தன்னை இந்தியாவுக்கு இங்கிலாந்து அரசு நாடு கடத்தக் கூடாது என இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு கடந்த சில வாரங்களாக விசாரிக்கப்பட்டு, இன்று (ஏப்ரல் 08, 2019) ஒரு தீர்வுக்கு வந்திருக்கிறது இங்கிலாந்து நீதிமன்றம். அதன் படி விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம். என தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
தீர்ப்பு
விஜய் மல்லையா தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டாம் எனச் செய்த மேல் முறையீடுகள் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதோடு இங்கிலாந்தின் உள் துறை அமைச்சகச் செயலர் கையெழுத்திட்ட நாடு கடத்தும் ஆர்டரின் படி விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
இந்திய விசாரணைகள்
இந்தியாவின் அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை என பல்வேறு இந்திய அரசு அமைப்புகள் மல்லையாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை விசாரித்து வருகிறார்கள். அதில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மல்லையா கிங் ஃபிஷ்ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் ஓடியதும் ஒரு வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.
73,000 டூ 30,000 பவுண்ட்
சமீபத்தில் தான், மல்லையா தான் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய கடனை திருப்பிச் செலுத்த தனக்கு வழங்கும் நிதிச் சலுகைகளில் பாதிக்கு பாதியைக் குறைத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து நீதிமன்றம் மல்லையவுக்கு ஒரு மாதம் சுமார் 73,300 பவுண்ட் வரை செலவழித்துக் கொள்ள அனுமதித்தது. ஆனால் மல்லையா 29,500 பவுண்ட்கள் போதும் எனச் சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனக்கு மட்டும் ஏன்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு பொதுத் துறை வங்கிகள் கடன் கொடுத்து நிறுவனத்தை நடத்தி கடனை திருப்பி எடுத்துக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறார்கள். அதே போலத் தானே தானும் கடன் வாங்கி கிங் ஃபிஷ்ஷர் நிறுவனத்தை நடத்தி கடன்களைத் திருப்பி அடைக்க முயற்சித்தேன்.. என்னை மட்டும் ஏன் இந்திய அரசு இத்தனை பாரபட்சமாக நடத்துகிறது என ட்விட்டரில் முன்பே குமுறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications