மும்பை: எப்போதுமே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இவ்வளவு முதலீடுகள் வந்திருக்கிறது என்று தானே செய்தி படிப்போம். இப்போது இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் செய்திருக்கும் முதலீடுகளைக் குறித்துப் படியுங்களேன்.
மார்ச் 2019 மாதத்தில் மட்டும் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் 2.69 பில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறார்களாம்.

இது கடந்த மார்ச் 2018-ல் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் செய்த முதலீடுகளை விட 18 சதவிகிதம் அதிகம் என உச்சி முகர்ந்திருக்கிறது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா.
கடந்த மார்ச் 2018-ல் இந்திய நிறுவனங்கள் வெளி நாடுகளில் 2.28 பில்லியன் டாலர் வரை மட்டுமே முதலீடு செய்திருந்தார்கள். அவ்வளவு ஏன் கடந்த பிப்ரவரி 2019-ல் கூட இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் 1.71 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்திருந்தார்கள்.
சரி மார்ச் 2019-க்கு வருவோம். மார்ச் 2019-ல் செய்த 2.69 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடுகளில் 1.68 பில்லியன் டாலர் கடனாகவும், 564.97 மில்லியன் டாலர் பங்குகளாகவும், 443.71 மில்லியன் டாலர் கேரண்டிக்களாகவும் முதலீடு செய்திருக்கிறார்களாம்.
மொத்த 2.69 பில்லியன் டாலரில் டாடா ஸ்டீல் நிறுவனம் மட்டும் 1.15 பில்லியன் டாலரை வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். டாடா ஸ்டீல் நிறுவனம் தனக்கு கீழ் இருக்கும் ஒரு சிங்கப்பூர் துணை நிறுவனத்துக்கு இந்த முதலீடுகளைச் செய்திருக்கிறார்கள். தனிப்பட்ட நிறுவனமாக வெளி நாடுகளில் அதிக தொகை முதலீடு செய்த பெருமை நம் டாடா ஸ்டீல் நிறுவனத்தையே சேரும்.
டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு அடுத்த படியாக ஜே.எஸ்.டபிள்யூ சிமெண்ட் நிறுவனம் தனக்கு கீழ் ஒருங்கிணைந்த அரபு அமீரகத்தில் இருக்கும் தன் துனை நிறுவனத்துக்கு 82 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது.
Oil and Natural Gas Organisation - ONGC நிறுவனம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களோடு கூட்டு நிறுவனமாக செயல்பட்டு தன் வியாபாரத்தை பெருக்க ஒப்பந்தங்களை மேற் கொண்டிருக்கிறது. அதன் படி மியான்மர், ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகளில் சுமார் 71 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறதாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications