இனி தர முடியாது..பணம் கொடுத்ததான் எரிபொருள்.. ஜெட் ஏர்வேர்ஸை நிராகரித்த ஐ.ஓ.சி

டெல்லி : கடன் பிரச்சனையால் தவித்து வரும் ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்திற்கு இது போதா காலமே. தொடர்ந்து கடன் பிரச்சனையில் உள்ள இந்த நிறுவனத்தின் பங்குகளை யாரும் வாங்க முன்வராததும், அதேசமயம் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு சரி வர சம்பளம் கொடுக்க முடியாமை, இதைத் தொடர்ந்து தற்போது ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்திற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எரிபொருளை வழங்க முடியாது என்றும் அறிவித்துள்ளது.

இனி தர முடியாது..பணம் கொடுத்ததான் எரிபொருள்.. ஜெட் ஏர்வேர்ஸை நிராகரித்த ஐ.ஓ.சி

மேலும் விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் பயணிகளைக் கவர பல்வேறு கட்டணச் சலுகைகள், சிறப்பு சலுகைகள் என பலவாறு அறிவித்து வருகின்றன. இந்தப் போட்டியால் சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து கொண்டிருக்கின்றன. அதிலும் ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனம் மிக கடுமையான இழப்பை சந்தித்து வந்துள்ளது.

இந்த நிலையில் கிங்பிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும். ஜெட் ஏர்வேர்ஸ் வெளிநாட்டு விமான நிறுவனங்களிடம் இருந்து விமானங்களை குத்தகைக்கு வாங்கி இயக்கியது. ஆனால் தற்போது அந்த வாடகை பாக்கியையும் செலுத்த முடியாமல் தவித்து வருகிறது.

இது போன்ற பல காரணங்களால் 119 விமானங்களை வைத்திருந்த ஜெட் ஏர்வேஸ், தற்போது பலவற்றை நிறுத்தி விட்டு வெறும் 16 வழித்தடங்களில் மட்டும் இயக்கி வருகிறது.

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு விமானங்களில் நிரப்ப இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எரிபொருள் அளித்து வந்தது. இதற்கு மிகப்பெரிய தொகையை பாக்கி வைத்துள்ளதால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பெட்ரோல் சப்ளையை இன்று முதல் நிறுத்திவிட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+