டெல்லி: தென் இந்தியாவை சேர்ந்த பிரபல வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனமான இந்தியா புல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணையப் போவதாகவும், இதற்கு இந்த நிறுவனங்களின் தலைமையிலான இயக்குனர் குழுக்கள் மட்டும் ஒப்புதல் அளித்திருந்த நிலையில் பங்கு தாரர்கள் தரப்பில் இன்னும் ஒப்புதல் வாங்க படவில்லை. ஆனால் தற்போது இந்த இணைப்பை எதிர்த்து அகில இந்திய ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து இந்த சங்கத்தின் தலைவர் வெங்கடாச்சலம், ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்தி காந்த தாஸிக்கு கடிதம் அனுப்பிள்ளதாகவும் கூறப்படுகிறது. அக்கடித்ததில் லட்சுமி விலாஸ் வங்கி நிதி நிலை குறித்த அனைத்து தகவல்களும் ரிசர்வ் வங்கிக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த வங்கியின் மொத்த வாராக்கடன் 3400 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதோடு கடந்த நிதியாண்டில் மூன்று காலாண்டுகளில் 630 கோடி ரூபாய் நஷ்டத்தையும் எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில் லட்சுமி விலாஸ் வங்கியை இந்தியா புல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைக்க போவதாக அந்த வங்கியின் வாரியக் குழு கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாகக் கடந்த வாரத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன.
அதேசமயம் லட்சுமி விலாஸ் வங்கி தனியாருக்கு சொந்த மான வங்கி என்றாலும், இந்த வங்கியில் சுமார் ரூ.30ஆயிரம் கோடி சாமானிய மக்களின் டெபாசிட் தொகை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அந்த வங்கியை பொதுத் துறை வங்கியுடன் இணைக்க முன்வர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ரிசர்வ் வங்கி இந்த வங்கி மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனம் இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்க இன்னும் கால அவகாசம் எடுத்துக் கொள்ளூம் என்று தெரிகிறது.