அடேங்கப்பா இணைப்புக்கு ரூ.7200கோடியா..வங்கி உத்திரவாதமா தரணுமாம்..தொலைத்தொடர்பு துறை

டெல்லி : டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைக்க இந்திய தோலைத்தொடர்பு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தொய்ந்து போய் உள்ள தொலைத் தொடர்பு துறையில் கால் பதிக்க முடியும் என்று இந்த நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளன.

டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைப்பதற்கு அந்த நிறுவனம் ரூ.7500 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற் நிபந்தனையிலேயே இந்ர்த இரு நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த கொள்கையின் அடிப்படையிலேயே இந்த நிறுவங்களின் இணைப்புக்கு இந்திய தொலைத் தொடர்பு துறை அறிவித்துள்ளது.

தொலைத் தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின் ஹா இந்த இரு நிறுவனங்களின் இணைப்புக்கு பல நிபந்தனைகளின் ஒப்பதலுக்கு பிறகு அனுமதி அளித்தார். இதனையடுத்து அமைசர் ஒப்புதல் அளித்ததையடுத்து தொலைத்தொடர்பு நிறுவனம் பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் ரூ.7200 கோடி வங்கி உத்திரவாதமாக அளிக்குமாறு கேட்டுள்ளது.

ஏர்டெல் தரும் பணம் அலைக்கற்றைக்கு தான் பணம்

ஏர்டெல் தரும் பணம் அலைக்கற்றைக்கு தான் பணம்

ஏர்டெல் நிறுவனம் அளிக்கக் கூடிய ரூ.7200 கோடியில், ரூ.6000 கோடி ஒரு முறை செலுத்தக்கூடிய அலைக்கற்றைக்கு செலுத்துவதற்கான பணமாகும். மீதமுள்ள ரூ.1200 கோடி டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திடம் இருந்து கைபற்றக் கூடிய அலைக்கற்றைக்கு செலுத்த வேண்டிய தொகை என்றும் கூறியுள்ளது தொலைத் தொடர்பு துறை.

டாடாவின் 19 வட்டங்கள் இனி ஏர்டெல்லுக்கு

டாடாவின் 19 வட்டங்கள் இனி ஏர்டெல்லுக்கு

இந்த நிறுவனங்களின் ஓப்பந்தபடி டாடா டெலி சர்வீசஸ் நிறுவனதிற்குற்பட்ட 19 தொலைத் தொடர்பு வட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களுடன் இணைக்கப்படுவர். இதில் உள்ள 19 தொலைத்தொடர்பு வட்டங்களில் 17 வட்டங்கள் டாடா டெலிசர்வீசஸ் தொலைத் தொடர்வு நிறுவனமும், 2 வட்டங்கள் டாடா டெலிசர்வீசஸ் தொலைத்தொடர்பு, மகாராஷ்டிராவிலும் தனது சேவைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த 19 வட்டங்க்களும் பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைக்கப்படும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.

கூடுதலான அலைக்கற்றை கிடைக்கும்

கூடுதலான அலைக்கற்றை கிடைக்கும்

இந்த இணைப்பின் மூலம் பார்தி ஏர்டெல் நிறுவனதிற்கு கூடுதலாக 178.5 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையும், 1800,2100 மற்றும் 850 அலைவரிசைகளும் கிடைக்கும். இது இந்த நிறுவனத்தின் 4ஜி சேவையை அதிகரிக்க மேன்மேலும் இந்த நிறுவனத்திற்கு உதவும். இதன் மூலம் தொலைத்தொடர்பு துறையில் ஒரு தனியிடத்தை பார்தி ஏர்டெல் வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டண விகிதங்களிலும் மாற்றம் இருக்கலாம்

கட்டண விகிதங்களிலும் மாற்றம் இருக்கலாம்

தொலைத்தொடர்பு துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் கார்ப்பரேட் நிறுவனங்க்களுக்கு மத்தியில் பார்தி ஏர்டெல் இதன் மூலம் தனியிடத்தை வகிப்பதோடு, கட்டண முறைகளிலும் இதன் மூலம் பெரிய மாற்றம் வரும். இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்றும் சமூல ஆர்வலர்கள் கூறுகின்றனர். பல துறைகளில் பல இணியப்புகளை மேற்கொண்டாலும் இந்தி தொலைத்தொடர்பு துறையானது மக்களீன் நேரடிதொடர்பில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+