கடைக்கு வந்த வாடிக்கையாளர்களரிடம் வாங்கிய காலணிகளை முழுமையாக பேக் செய்து, எடுத்துச் செல்ல வசதியாக கொடுக்கும் காகித பைகளுக்கு நபருக்கு 3 ரூபாய் என வசூல் செய்து வருகிறது Bata.
அந்த காகிதப் பையில் Bata-வின் பிராண்டும் தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும். ஆக நுகர்வோர் காசிலேயே தனக்கான விளம்பரச் செலவுகளையும் சரி கட்டிக் கொண்டு தங்கள் Bata பிராண்டை வளர்க்கிறார்கள்.
இதை எதிர்த்து ஒரு தனி நபர் சண்டிகர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வாதாடி 4,000 ரூபாய் நஷ்ட ஈடும், 5,000 ரூபாய் நுகர்வோர் சட்ட உதவிக் கணக்கிலும் Bata நிறுவனத்தை டெபாசிட் செய்ய வைத்து இருக்கிறார்.
பிரச்னை
சந்திகரைச் சேர்ந்தவர் தினேஷ் பிரசாத் ராதுரி. கடந்த பிப்ரவரி 05, 2019 அன்று செக்டார் 22டி பகுதியில் உள்ள Bata-வின் அதிகார பூர்வ அவுட் லெட்டில் ஒரு ஜோடி காலனிகளை வாங்கி இருக்கிறார். காலணியின் விலை 399 ரூபாய் தான். ஆனால் 3 ரூபாய் கூடுதலாக பில்லில் காகிதப் பைகளுக்காக சேர்த்து, வசூலித்திருக்கிறார்கள். எவ்வளவோ பேசிப் பார்த்தும் காகித பைகக்கான கட்டணத்தை திரும்பக் கொடுக்கவில்லை.
வழக்கு
இந்த பிரச்னைக்கு தீர்வு காண தினேஷ் சந்திகர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் "Bata நிறுவனம் எங்களிடமே காகித பைகளுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் Bata நிறுவனத்தின் பெயரைம் பதித்து பிராண்டிங் செய்து கொள்கிறார்கள். இது ஏற்புடையது அல்ல" என வாதாடி இருக்கிறார்கள்.
நஷ்ட ஈடு
எனவே Bata நிறுவனம் என்னிடம் வாங்கிய 3 ரூபாய் உடன், குறையுடன் செய்த சேவைகளுக்கு ஒரு நல்ல நஷ்ட ஈட்டுத் தொகையையும் கொடுக்க வேண்டும் என வாதாடினார். இதற்கு Bata நிறுவனம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து. ஆனால் நீதிமன்றம் மசிவதாகத் தெரியவில்லை. ஆகையால் தீர்ப்பு Bata நிறுவனத்துக்கு எதிராக வந்திருக்கிறது.
தவறு தான்
ஒரு நிறுவனத்தின் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக காகிதப் பைகளையோ அல்லது பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையான வசதிகளை அவர்கள் தான் செய்துக் கொடுக்க வேண்டும். இந்தியாவில் அப்படித் தான் செய்து கொடுக்கிறார்கள். அந்த விஷயத்தில் Bata தவறி இருக்கிறது. எனவே இதை ஒரு சேவை குறைபாடாகவே பார்க்கிறது இந்த நுகர்வோர் நீதிமன்றம்.
1000 பைகள்
எனவே 1,000 காகித பைகளுக்கான பணத்தை (1000*3 = 3,000 ரூபாய்) தினேஷுக்கு நஷ்ட ஈடாகக் கொடுக்கச் சொல்லி இருக்கிறது. அதோடு தினேஷின் வழக்குச் செலவுகளுக்கு 1,000 ரூபாயையும் கொடுக்கச் சொல்லி இருக்கிறது. இது போக நுகர்வோர் நீதிமன்றத்தில் 5000 ரூபாயையும் மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு மையத்தின் சட்ட உதவிக் கணக்கில் டெபாசிட் செய்யுமாறும் தீர்பளித்திருக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications