மும்பை : ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கனவே ஊழியர்களின் சம்பளப் பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று ஸ்டிரைக் செய்ய போவதாக அறிவித்திருந்த ஊழியர்கள் மிரட்டியும் பார்த்தாச்சு, கெஞ்சியும் பார்த்தாச்சு இனி செய்வது என்ற குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பிரதமர் மோடியை நாடியுள்ளனர்.
இந்த நிலையில் ஏற்கனவே 117 விமானங்கள் 25 ஆக மாறி அது தற்போது 6 - 7 என்ற நிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சுமார் 20,000 பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. இதனால் இதில் விமானிகள் உள்பட, விமானத்தின் இன் ஜினியர்கள், மற்ற ஊழியர்கள் என மொத்தம் சுமார் 20,000 பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும் யாருக்கும் கடந்த ஜனவரி மாததிலிருந்து சம்பளமும் அளிக்கப்படவில்லை. இதனால் எஸ்.பி.ஐ வங்கியின் நிதியான ரூ.1500 கோடியை அளிக்க வேண்டும் என்றும்,இதன் மூலம் 20,000 பேரின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர் சங்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸை விற்று கடனை மீட்கலாம் என்று கண்ணோட்டத்தில் எஸ்பிஐ தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இதனால் எஸ்.பி.ஐ ஜெட் ஏர்வேஸ் வெளிநாட்டு விமான பயணங்களை முழுமையாக நிறுத்தியது. இதைத் தொடர்ந்து இப்படியே சென்றால் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் போன்று ஜெட் ஏர்வேஸூம் திவாலாகி விடுமோ? என்றும், இதனால் மத்திய அரசு தலையிட்டு சுமூக முடிவு காண முயற்சி செய்ய வேண்டும்.
சென்ற மாதம் வரை 117 -க்கும் மேற்பட்ட விமானங்களுடன் இயங்கி வந்த ஜெட் ஏர்வேஸ் தற்போது வெறும் 7 விமானங்களுடன் உள்நாட்டு விமான சேவையை மட்டும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இடைக்கால நிதியாக 1,500 கோடி ரூபாயை உடனடியாக ஜெட் ஏர்வேஸ் அளிக்க முடிவு செய்துள்ளதால் இன்று இந்திய பங்கு சந்தையில் பெரிய ஏற்றம் இறக்கம் இல்லாமல் பிளாட்டாக வர்த்தகமாகி வருகிறது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஜெட் ஏர்வேஸ்க்கு ஒரு ஆண்டுக்கு செலுத்த வேண்டிய விமான எரிபொருள் கட்டணம் மட்டும் 7,000 கோடி ரூபாயாக உள்ளது. மேலும் விமானங்களுக்கான குத்தகை பாக்கியும் உள்ளது. அதேசமயம் வங்கி கடனும் உள்ளது. ஆக இந்த 1500 கோடி ரூபாயை யாருக்கு கொடுக்கும் என்று தெரியாமல் ஊழியர்கள் விழி பிதுங்கியுள்ளனர்.
இதுமட்டுமா எஸ்பிஐ ஒதுக்கும் நிதியை வைத்து தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை தொடர்ந்து வழங்குமா இல்லையா என்பதே ஊழியர்களின் கேள்வியாக உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications