டெல்லி: CBRE என்கிற அமைப்பு இந்தியாவின் 9 முக்கிய பெரு நகரங்களில் வளர்ந்து வரும் அலுவலக இடங்களைக் குறித்து சில தரவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை , பெங்களூரூ, ஹைதராபாத், புனே, அஹமதாபாத், கொச்சி என்கிற ஒன்பது பெரு நகரங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறது.
ஒன்படு நகரங்களையும் ஒட்டு மொத்தமாகச் சேர்த்தால் கடந்த ஜனவரி 2019 முதல் மார்ச் 2019 வரையான காலத்தில் 13.4 மில்லியன் சதுர அடி நிலம் வணிக ரீதியிலான விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரையான காலத்தில் 9.2 மில்லியன் சதுர அடி நிலம் மட்டுமே வணிக ரீதியிலான விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த ஒரு வருடத்தில் மட்டும் 46 சதவிகிதம் வணிக ரீதியிலான விஷயங்களுக்கு நிலத் தேவை அதிகரித்திருக்கிறது.
இந்த ஒன்பது நகரங்களில் ஹைதபாராத்தில் மட்டும் சுமார் 7 மடங்கு வணிக ரீதியிலான தேவைகளுக்கு நிலத் தேவை அதிகரித்திருக்கிறது. கடத ஜனவரி 2018 மார்ச் 2018 காலத்தில் ஹைதராபாத்தில் 0.7 மில்லியன் சதுர அடி மட்டுமே வணிக ரீதியிலான தேவைகளுக்கு நிலம்m பயன்படுத்தப்பட்டதாம். ஆனால் இந்த ஜனவரி 2019 - மார்ச் 2019-ல் 5.2 மில்லியன் சதுர அடி வணிக ரீதியிலான தேவைகளுக்கு நிலம்m பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம்.
ஆக ஹைதராபாத்தில் அலுவலகம் மற்றும் வணிக ரீதியிலான தேவைகளுக்கு, நாளுக்கு நாள் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறதாம். எப்போதுமே வணிக ரீதியிலான தேவைகளுக்கு பெங்களூர் தான் அதிக நிலங்களை ஒதுக்கும். முதல் முறையாக ஹைதராபாத் பெங்களூரை பின்னுக்கு தள்ளி இருக்கிறதாம்.