டெல்லி : ஜெட் ஏர்வேஸ் என்ன பிரச்சனை? கடன் பிரச்சனையா?அதான் விமானங்கள் ரத்தா? அப்படின்னா சரி? இப்படிதான் நம்மில் பலரும் இருக்கிறோம். ஆனால் அதன் மறுபுறம் சுமார் 22,000 மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். அதை பற்றி நினைத்தோமா?
ஐயோ தேதி 20 ஆகுது அடுத்த மாத இ.எம்.ஐ வருது, சம்மர் ஹாலிடேஷ் முடிஞ்ச உடனே பசங்களுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும், வீட்டு வாடகை தர வேண்டும், ஏன் இன்னைக்கு 12 வகுப்பு தேர்வு முடிவுகள் இதில் எத்தனை பேரின் குழந்தைகள் அடுத்து காலேஜ் போக வேண்டும். அதற்குண்டான கட்டணங்கள் செலுத்த வேண்டும் இது போன்ற பல்லாயிரம் கேள்விகளுடன் இருக்கிறார்கள் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள்.
இதில் பலர் தனது மனைவியரின் நகைகளை அடகு வைத்து செய்வதாகவும், சிலர் தங்களது வாகனங்களை விற்று இது போன்ற பிரச்சனைகளை தீர்த்து வருவதாகவும், இன்னும் சிலர் மாதம் மாதம் கட்ட வேண்டிய இ.எம்.ஐ கட்ட தவறியுள்ளனர். இதற்கு என்ன தீர்வு ஜெட் ஏர்வேஸ் இயங்குமா ? இயங்காதா? சம்பளம் கிடைக்குமா? கிடைக்காதா? அடுத்த் என்ன நடக்கும் இது போன்ற பல கேள்விகள் மனதில் எழுகின்றன.
அன்றாட தேவைகே கஷ்டபடுகிறோம்
இதுகுறித்து பேசுகிறார் ஜெட் ஏர்வேஸில் காந்த 24 வருடங்களாக பணிபுரிந்த சந்திரசேகர் கூறுகையில், இங்கு பணி புரிந்து வந்த ஊழியர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கே கஷ்டப்படும் நிலைமை நிலவி வருகிறது. குறிப்பாக இந்த நேரங்களில் காலேஜ் பீஸ் கட்டுவது, அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வது போன்ற சிக்கல்களை கையாண்டு வருகின்றனர்.
நகைகளை வைத்து சமாளித்து வருகிறோம்
இதில் சில ஊழியர்கள் தங்களின் மனைவி மார்களின் நகைகளை வைத்து அவற்றை சமாளித்து வருகின்றனர். இந்த சூழ்னிலையிலும் கூட பல ஊழியர்களும் அவர்களின் குடும்பங்களும் ஜெட் ஏர்வேசுக்கு தேவையான நிதி உதவி கிடைக்க வேண்டும் என்றே பிராசித்து வருகின்றனர். ஏனெனில் அவர்களில் பலர் இன்னும் கூட தங்களது வேலை போய்விட்டது என நம்ப வில்லை.
வாடகை வீடுகளை காலி செய்யும் அவலம்
இதில் சில ஊழியர்கள் பேசுகையில், ஊழியர்கள் அவர்கள் தங்கியிருந்த வாடகை வீடுகளை விடுத்து சென்று விட்டார்கள். பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் இங்கு வேலையிழந்தாலும் அவ்வளவு எளிதில் வேலை கிடைக்கப் போவதில்லை. இதனால் இனி அடுத்தடுத்து வரும் மாதங்களில் எப்படி பிரசனைகளை சமளிக்க போகிறோம் என்று தெரியவில்லை எங்கிறார்கள் பல ஊழியர்கள்.
வேலையை காப்பாற்ற வேண்டும்
இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நலன் புரி சங்கத் தலைவர் அஷிஷ் குமார் கூறுகையில் தற்போதுள்ள வேலைகளை முதலில் காப்பாற்ற வேண்டும். பிறகு புதிய வேலைகளை உருவாக்குவதில் முயல வேண்டும். ஊழியர்கள் தெருவுக்கு செல்வதற்கு முன்பாவது 9-வது பறக்கட்டும் என் கிறார்கள. அதென்ன 9 என் கீறிர்களா? இது ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் எண் 9W ஆகும். எங்களின் அந்த் கடவுளுக்காவது கேட்கட்டும் என் கின்றனர் ஊழியர்கள்