பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் வரி.. குழப்பத்தில் நிறுவனங்கள்..என்ன செய்யுமோ அரசு

டெல்லி : இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய நிறுவனங்கள் (ஏம்.என்.சி - MNC) இனி அதிகப்படியான வரியை செலுத்த நேரிடும் என்று மத்திய வரித்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் நிரந்தரமாக நிறுவனத்தை வைத்திருக்கும் எம்.என்.சி நிறுவனங்களுக்கு லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் மத்திய வரித்துறையால் நியமிக்கப்பட்ட குழுவால் ஒரு வரைவுக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை மத்திய வரி அமைச்சகம் ஏற்றுக் கொள்ளுமேயானால் எம்.என்.சி நிறுவனங்களுக்கு வரி கூடிய விரைவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கையின் படி யாரெல்லாம் நாட்டிலிருந்து அதிகப்படியான லாபத்தை எடுத்துச் செல்கிறார்களோ அவர்கள் தங்களது லாபத்திலிருந்து அதிகப்படியான வரியை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் வரி.. குழப்பத்தில் நிறுவனங்கள்..என்ன செய்யுமோ அரசு

வரியை மட்டுமே செலுத்தும்

இந்தியாவில் நிறுவப்படும் எந்த ஒரு வெளி நாட்டு நிறுவனமும் இந்த வரி விதிகளின் படிதான் அமைக்கப்படும். இவ்வாறு நிறுவப்படும் நிறுவனங்கள் இந்தியாவில் வரியை மட்டுமே செலுத்தும் என்றும் அந்த அறிக்கைகள் கூறுகின்றன. இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி விகிதத்தை பொறுத்து அவர்களின் வருமானத்தின் மீது வரி வதிக்கப்படும்.

நிகர லாபத்திலிருந்து கணக்கிடப்படுகிறது

கார்ப்பரேட் வரி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு நிறுவனத்தின் நிகர வருவாயில் இருந்து விதிக்கப்படுகிறது. கார்ப்பரேட் வரிகள் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப மாறுபடும். ஒரு நிறுவனத்தின் விற்பனை, பொது மற்றும் நிர்வாகச் செலவுகள், மற்றும் விற்பனை பொருட்களின் விலை இதுபோன்றவை அல்லாது வரும் வருமானத்திலிருந்து கார்ப்பரேட் வரி விதிக்கப்படுகிறது.

இதில் எந்த வகையான கார்பரேட்

இந்திய நிறுவனச் சட்டம் 1956-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், இந்தியாவில் கார்ப்பரேட் வரி செலுத்த வேண்டும்.இது இரண்டு வகையில் உள்ளது. ஒன்று உள் நாட்டு கார்ப்பரேட் மற்றொன்று வெளிநாட்டுக் கார்ப்பரேட் நிறுவனம். இந்தியாவில் தொடங்கப்படாத அல்லது கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை இந்தியாவில் அமையாத நிறுவனங்கள் வெளிநாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்கள் எனப்படுகிறது

வரி அதிகரிக்கும்

இவ்வாறு வரியை அதிகரித்திருப்பதால் இந்தியாவில் நிறுவப்படும் வெளி நாட்டு நிறுவனங்கள் அதிகளவில் தற்போது நிறுவப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அதிக வரி இந்திய அரசுக்கு ஒரு புறம் சேரும் என்றாலும், அன்னிய நிறுவங்கள் அதிகளாவில் இந்தியாவை தேடி வருவதே இது போன்ற காரணங்களால் தான். இதன் மூலம் இந்த எண்ணிக்கை குறையும் என்று அஞ்சப்படுகிறது. எனினும் இந்திய நிறுவனங்களுக்கு இது நிறைய வாய்ப்புகளை அளிக்கும் என்பதே ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

எவ்வளவு வரி

இவ்வாறு விதிக்கப்படும் அதிகப்படியான வரியால் நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பை நினைத்தே கருத்தில் கொண்டேஅரசு வரி விதிக்க வேண்டும் என்றும், இது எவ்வளவு என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிக்கைகள் ஏதும் வெளியிடப்பட வில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+