டெல்லி : இந்தியாவில் கடந்த 2018- 2019- ம் ஆண்டில் காப்பர் ஏற்றுமதி 70 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் அளவு 1.1 பில்லியன் டாலர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், காப்பர் இறக்குமதியானது அதிகரித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை மக்கள் எழுச்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகஅரசால் மூடப்பட்டுள்ளது. அதைத் திறக்க வேதாந்தா நிறுவனம் என்னென்னவோ செய்து பார்க்கிறது.
ஆனால் இதுவரை ஆலை திறக்கப்படவில்லை. இதன் காரணமாக வேதாந்தா நிறுவனத்தின் காப்பர் ஏற்றுமதியில் பெரும் அடி விழுந்துள்ளது.
உற்பத்தி அடியோடு காலி
தூத்துக்குடி நிறுவனத்தின் வருடாந்திர உற்பத்தி 4 லட்சம் டன்கள் ஆகும். இது தற்போது அடியோடு நின்று போய் விட்டது. ஒட்டுமொத்த நாட்டின் காப்பர் உற்பத்தியில் இது 40 சதவீதம் ஆகும். இதன் காரணமாக இந்தியாவின் காப்பர் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டது.
காப்பரின் இறக்குமதி அதிகரிப்பு
மறுபக்கம் இந்தியாவின் காப்பர் இறக்குமதி அதிகரித்துள்ளது. கடந்த 10 மாதங்களில் மட்டும் இறக்குமதி செய்யப்பட்ட காப்பரின் மதிப்பு, கடந்த 2017 - 2018 -ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்டதற்குச் சமம் என அறிக்கைகள் மூலம் தெரிகிறது.
காப்பரின் ஏற்றுமதி வீழ்ச்சி
ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 2017 - 2018- ம் ஆண்டில் காப்பரின் ஏற்றுமதி 3.5 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதுவே 2018 - 2019 - ம் ஆண்டில் 1.1 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது என்றும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலை
இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர் லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்ட நிலையில், அதை உச்ச நீதி மன்றம் மறுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து உற்பத்தி குறைந்து விட்டதால் சீனாவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதாவது சீனாவிலிருந்து காப்பர் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாம்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications