சம்பள செலவை மிச்சப்படுத்த வி.ஆர்.எஸ்.. ரூ.6700 கோடி நிதி திரட்ட முடிவு.. பி.எஸ்.என்.எல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு விருப்ப ஒய்வு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த, பி.எஸ்.என்.எல் பத்திர வெளியீடு மூலம் 6700 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.இதற்கான ஒப்புதலும் விரைவில் கிடக்கும் என தொலைத்தொடர்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நஷ்டத்தில் இருப்பது ஏற்கனவே அனைவரும் அறிந்த விஷயமே. இந்த நிலையில் ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை அளிப்பதே பெரும் சுமையான நிலையில் உள்ளது. இந்த நிலையில் பி.எஸ்.என்.எல் ஒய்வு வயதைக் நெருங்கும் ஊழியர்களுக்கு வீ.ஆர்.எஸ் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் செலைவை மிச்ச படுத்த முடியும் என்று பி.எஸ்.என்.எல் நம்புகிறது.

சம்பள செலவை மிச்சப்படுத்த வி.ஆர்.எஸ்.. ரூ.6700 கோடி நிதி திரட்ட முடிவு.. பி.எஸ்.என்.எல்

இவ்வாறு திரட்டப்படும் தொகையில், விருப்ப ஒய்வு திட்டத்துக்கு 6365 கோடி ரூபாயும், மீதமுள்ள தொகை 4ஜி சேவையை விரிவுப்படுத்தவும் பயன்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டில் சிறந்தொரு 4ஜி சேவையை வழங்கமுடியும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

சம்பள செலவை மிச்ச படுத்த முடியும்

இந்த விருப்ப ஒய்வு திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் எம்.டி,என்.எல் நிறுவனத்தில் 1080 கோடி ரூபாய் மிச்சப் படுத்த முடியும் என்றும், இந்த ஒய்வு திட்டத்திற்காக சுமார் 9500 ஊழியர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால் கூட செலவை மிச்ச படுத்த முடியும் என்று எம்.டி.என்.எல்லின் நிர்வாக இயக்குனர் PK Purwar கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் அவசியம் - இ வேபில் முறைகேடுகளை தடுக்க மத்திய மறைமுக வரிகள் ஆணையம் அதிரடி ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் அவசியம் - இ வேபில் முறைகேடுகளை தடுக்க மத்திய மறைமுக வரிகள் ஆணையம் அதிரடி

வீ.ஆர்.எஸ் கொடுக்க முடிவு

இது குறித்து எம்.டி.என்.எல் நிறுவனத்தில் தலைவர் கூறுகையில், மொத்தம் 19,000 பேர் விருப்ப ஒய்வு பெற தகுதி உடையவராக உள்ளனர். இதில் கிட்டதட்ட 50 சதவிகிதம் ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு தேர்தெடுக்க நினைத்திருந்தோம், ஆனால் தற்போதைய கணக்கீட்டின் படி சுமார் 9500 ஊழியர்கள் இந்த வி.ஆர்.எஸை பெற்றால் கூட இதன் மூலம் 1080 கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் PK Purwar கூறியுள்ளார்.

இதுவரை இல்லாத சலுகைகள்

இதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பணப்பலன் சலுகைகள் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை செயல்படுத்துவதற்கு பத்திர வெளியீடு மூலம் 6700 கோடி ரூபாய்திரட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விருப்ப ஒய்வு திட்டத்திற்கு 6365 கோடி ரூபாய் போக எஞ்சிய தொகை 4ஜி இணைப்பு திட்டத்தை விரிவு படுத்த பயன்படுத்தப்படும். மேலும் இந்த நிதி திரட்டலுக்கு தேவையான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSNL may get nod to raise Rs.6700 crore for VRS

The Voluntary Retirement Scheme being proposed by the telecom department could save Rs.1,080 crore in annual wage expenses for Mahanagar Telephone Nigam Ltd, and the telco expects about 9,500 employees to opt for the scheme as and when it comes up, according to its chairman.
Story first published: Thursday, April 25, 2019, 12:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X