மும்பை: கூடிய விரைவில் மத்திய ரிசர்வ் வங்கி புதிய 20 ரூபாய் நோட்டுத் தாள்களை வெளியிடப் போகிறார்கள். தற்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸின் கையெழுத்தைத் தாங்கி வெளி வர இருக்கும் இந்த புதிய 20 ரூபாய் நோட்டின் பின் புறம் உலகப் புகழ் பெற்ற எல்லோரா குகைப் படத்தைப் பதிப்பிக்கிறார்களாம்.
இந்த புதிய 20 ரூபாய் நோட்டின் வண்ணம் பச்சை கலந்த மஞ்சளாக இருக்குமாம். இந்த புதிய நோட்டுக்கள் புழக்கத்தில் வந்தாலும், பழைய 20 ரூபாய் நோட்டுக்களும் புழக்கத்தில் இருக்குமாம். இந்த புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் 129 மில்லி மீட்டர் நீளத்துடனும், 63 மில்லி மீட்டர் அகலத்துடனும் இருக்குமாம்.

வழக்கம் போல இந்திய ரூபாய் நோட்டுக்களின் முன் புறத்தில் இருப்பது போல மாகாத்மா காந்தியின் படம், 20 ரூபாய் என ஆங்கிலத்திலும், தேவ நகரியிலும் எண்களில் அச்சிடப்பட்டு இருப்பது, சின்ன எழுத்துக்களில் 'RBI', 'भारत ', 'INDIA', '20' என அச்சிடப்பட்டிருப்பது, பாதுகாப்பு நுண்ணிழை, அசோகத் தூண், காந்திக்கு வலது பக்கத்தில் ஆர்பிஐ ஆளுநர் கையெழுத்து, 20 என்கிற வாட்டர் மார்க் என அனைத்தும் இருக்கின்றன. புதிய 20 ரூபாய் நோட்டுக்களின் பின் புறத்தில் எந்த ஆண்டு இந்த நோட்டுக்கள் அச்சிடப்பட்டது என்கிற விவரம், ஸ்வச் பாரத் லோகோ, 15 அட்டவணை மொழிகள், எல்லோரா குகையின் படம் என ஒரு மாதிரியாக இருக்கிறது.
நவம்பர் 08, 2016-க்குப் பிறகு முதலில் ரோஸ் நிறத்தில் 2000 ரூபாய் தாள்களும், பச்சை நிறத்தில் 500 ரூபாய் தாள்களும், ஆரஞ்சு வண்ணத்தில் 200 ரூபாய் தாள்களும், நீல வண்ணத்தில் 100 ரூபாய் தாளும், பச்சை மற்றும் நீலம் கலந்த வண்ணத்தில் 50 ரூபாய் தாள்களும், பிரவுன் நிறத்தில் 10 ரூபாய் தாள்களும் வெளியிட்டது ஆர்பிஐ. இப்போது 20 ரூபாய்க்கும் ஒரு புதிய வண்ணத்தில், புதிய நோட்டுக்களை வெளியிட இருக்கிறது ஆர்பிஐ. மோடிஜி ஆட்சிக்காலத்தில் என்ன மாறம் கண்டீர்கள் என யாராவது கேட்டால், கலர் கலராக இந்த நோட்டுக்களை எடுத்துக்காட்டுங்கள் என நெட்டிசன்களும் வலைதளங்களில் ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது வரை இந்தியாவில், ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பொறுப்பு, மத்திய ரிசர்வ் வங்கியிடம் தான் இருக்கிறது. மிக முக்கியமாக பணமதிப்பிழப்பு காலத்தில், புதிய நோட்டுக்களை அச்சடிக்கும் பெருஞ்சுமையையும் நம் ஆர்பிஐ தான் சுமந்தது. அதோடு சுமார் 21,000 கோடி ரூபாயை செலவழித்து புதிய நோட்டுக்களை அச்சடித்தது மத்திய ரிசர்வ் வங்கி.
எது எப்படியோ பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த ஸ்வச் பாரத் திட்டத்தை அனைத்து புதிய ரூபாய் நோட்டுக்களிலும் பதிவு செய்துவிட்டது. இதை இன்று வரை சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் குற்றமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறர்கள். ஆனால் மோடி தான் பத்திரிகையாளர்களையே சந்திப்பதில்லையே..! பிறகு தானே சமூக வலைதளங்களில் சொந்தமாக பேசுவது... எனவும் குற்றம்சாட்டுகிறார்கள்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications