டெல்லி : கடந்த சனிக்கிழமையன்று சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் விமானங்கல் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. இதன் எதிரொலியாக இன்றும் 137 விமானங்கள் கால தாமத்துடன் இயங்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் விமான பயணச் சீட்டுக்களை புக் செய்திருக்கும் விமானிகளின் செக் இன் தொடங்கி, லக்கேஜ் மற்றும் உடைமைகளை பேக் செய்வது, கவுண்ட்ரில் முன் பதிவுகளை மேற்கொள்வது என எல்லா விஷயமும் இந்த பயணிகள் மென்பொருளை (software) நம்பித் தான் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த மென்பொருள் தான் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணி முதல் காலை 8.45 வரை சரியாக வேலை செய்யவில்லை என்று அறிவித்தது. இந்த நிலையில் சனிக்கிழமை சுமார் 149 விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டன.
நேத்தும் லேட் - இன்னைக்கும் லேட் தான்
இந்த நிலையில் சனிக்கிழமை ஏற்பட்ட கால தாமதத்தின் காரணமாக ஏர் இந்தியாவின் 137 விமானங்கள் 197 நிமிடங்கள் ஞாயிற்றுக்கிழமையான இன்று தாமதமாக இயங்கும் விமானம் இயங்குவதாகவும் ஏர் இந்திய விமான துறை செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
அடுத்தடுத்த செக்டாரிலும் லேட் தான்
இதன் விளைவு ஞாயிறன்றும் உள்ளது. இதுபற்றி கேட்டபோது, முதல் செக்டாரில் தாமதம் காரணமாக, 137 விமானங்கள் 197 நிமிடங்கள் (சராசரியாக) தாமதமாக உள்ளன என்றும், இதன் பின் விளைவு அடுத்தடுத்த செக்டார்களிலும் இருக்கும் என்பது தான்.
மூன்று செக்டாருக்கும் பாதிப்பு இருக்கும்
ஒரு விமானம் முதல் செக்டாரில் கால தாமதமாகி விட்டால், அது இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவுகளிலும் தாமதமடையக் கூடும். நாளொன்றுக்கு ஒரு துறையிலிருந்து ஒரு விமானம் பொதுவாக செல்கிறது. உதாரணமாக, டெல்லி-மும்பை ஒரு துறையானது, மும்பை-பெங்களூரு மற்றொரு துறை மற்றும் பெங்களூரு-சென்னை மூன்றாவது துறை ஆகும்.
ஏர் இந்தியாவின் 137 விமானங்கள் மட்டுமே லேட்
ஏர் இந்தியா குழுமம், துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய விமானங்களின் சராசரி எண்ணிக்கை 674 ஆகும். ஆக இதனால் விமான சேவை பாதிக்கப்படுவதுடன் பல பயணிகளும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதில் குறிப்பிடப்பட்ட 137 விமானங்கள் மட்டுமே லேட்., எனினும் மற்ற விமானங்களின் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றது என்றும் ஏர் இந்தியா கூறியுள்ளது.
பயணிகள் மிகுந்த அவதி
இந்த நிலையில் பல ஆயிரம் பயணிகள் போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு சேர முடியாமலும் அவதிப் பட்டு வருகின்றனர். மேலும் இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா அடிக்கடி இதே போன்று செயல்படுவதால் தான் தனியார் துறைகள் வளர்ந்து கொண்டே போகின்றன. இது முதல் முறை அல்ல, இதுபோன்று ஏற்கனவே நடந்துள்ளது. இதனால் பயணீகளின் என்ணிக்கை ஏர் இந்தியா குறைத்துக் கொள்கிறது என்றும் பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications