வாஷிங்டன்: அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் வர்த்தக கொள்கை முரண்பாட்டால், சீனா உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆதரவு அளித்து வருகிறது. இந்த நிலையில் சீனாவின் கொள்கையால் அந்த நாட்டில் செயல்பட்டு வரும் உற்பத்தி பிரிவுகளை இந்தியாவிற்கு மாற்ற அமெரிக்காவைச் சேர்ந்த 200 நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பு கொள்கையை பின்பற்றி, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் சீனா மிக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
இதையடுத்து சீன அதிபர் ஜீ ஜிங்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு, அமெரிக்க அரசு பொருட்கள் இறக்குமதிக்கு அதிகளவில் வரி விதித்துள்ளது. அதோடு உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பு கொள்கைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சீன உற்பத்தி நிறுவனங்கள் அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளன.
இந்தியாவில் உற்பத்தியை தொடங்க ஆர்வம்
இது குறித்து இந்தியாவின் யு.எஸ். ஐ.எஸ்.பி.எப் (USISPF) என சுருக்கமாக அழைக்கப்படும், அமெரிக்க - இந்திய திட்டம் மற்றும் கூட்டுறவு கூட்டமைப்பின் தலைவர், முகேஷ் ஆகி கூறியதாவது, சீனாவில் செயல்பட்டு வரும் அமெரிக்காவைச் சேர்ந்த, 200 நிறுவனங்கள், உற்பத்தி பிரிவுகளை இந்தியாவிற்கு மாற்ற ஆர்வமுடன் இந்தியாவை அணுகியுள்ளன. ஆக இது போன்ற நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, நிலம் கையகப்படுத்துவது முதல் சுங்க வரி வரையிலான பிரச்னைகளுக்கு தீர்வு காண, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம் என்கிறார் ஆகி.
வரப்போகும் அரசுக்கு பரிந்துரை
தொழில் தொடங்கும் நடைமுறை மேலும் வெளிப்படையாகவும், விரைவான செயல்பாட்டை கொண்டதாகவும் இருக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் தேர்தல் முடிந்த பின் மத்தியில் அமையவிருக்கும் புதிய அரசே மேற்கொள்ளும் வேண்டும் என்றும் வரப்போகும் அரசுக்கு தனது பரிந்துரையையும் தெரிவித்துள்ளார்.
இதுவரை உள் நாட்டு வணிகத்திற்கே முக்கியத்துவம்
ஏனெனில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மின்னணு வர்த்தகம் தரவுகளை உள்நாட்டில் சேமிப்பது ஆகியவற்றில், மத்திய அரசின் கொள்கைகள், சர்வதேச வணிகத்தை விட உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பிற்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தன. இதனால், இந்தியாவில் தொழில் தொடங்குவதை மேலும் சுலபமாக்கும் வகையிலும், நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, ஸ்திரமான வர்த்தக கொள்கைகளை வெளியிட வேண்டும் என வரப்போகும் புதிய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் கூறியுள்ளார் முகேஷ்.
முதலீடுகளை ஈர்க்க அறிக்கை
அதோடு அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பான அறிக்கையை கூட்டமைப்பு ஏற்கனவே உருவாக்கி உள்ளது. அதில் இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரித்தும், அதேசமயம் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளும் இடம் பெற்றுள்ளன. இதோடு வரப்போகும் அரசுடன் இணைந்து புதிய அறிக்கைகள் தயாரிக்கபடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா என்ன செய்ய வேண்டும்
மேலும் இந்தியா தனது ஏற்றுமதிகளை அதிகரிக்கவும், அந்த முன்னோக்கிலிருந்து செயல்பட இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று பரிதுரைக்க தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முன்னாள் உதவி அமெரிக்க வர்த்தக பிரதிநிதி மார்க் லின்ஸ்ஸ்காட், அமெரிக்க ஐ.சி.எஸ்.சி.எஃப்.எஃப் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றியும் வருகிறார்.
புது ஸ்டேட்டர்ஜி வேண்டும்
மேலும் இந்தியாவில் உற்பத்தி தொடங்குவதற்கு ஒரு ஸ்டேட்டர்ஜி வேண்டும் என்றும், அவர்கள் கூறுவது என்னவென்றால் இந்தியாவில் தொழி தொடங்க சிறு-சிறு பிரச்சினைகள் உள்ளன, அவை தற்போது தான் மெதுவாகக் குறைந்து வருகின்றன, இந்த நிலையில் பெரும்பாலான தேர்தல்களும் காத்திருக்கின்றன, இதனால் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு மட்டும் அல்லாது, பின்னர் உள்நாட்டு சந்தைக்குப் செல்ல விரும்பும் நிறுவனங்களூம் உள்ளன. ஆக இது போன்ற அனைத்து விஷயங்களையும் யோசித்து வரப்போகும் அரசே முடிவு எடுக்கும் என்றும், இதற்கான ஒரு சரியான ஒரு நடைமுறையும் அறிக்கையும் தயார் படுத்த வேண்டும் என்றும் இது தேர்தல்கள் முடிந்த பின்னரே தயார்படுத்த படும் என்றும் ஆகி கூறியுள்ளார்.
India – US தாராள வர்த்தக ஒப்பந்தம் பரிசீலிக்க வேண்டும்
முக்கியமாக இந்தியா - அமெரிக்கா இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவின் மலிவு விலை பொருட்களால் ஏற்படும் பாதிப்பை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியும். அமெரிக்க சந்தையிலும் அதிக பங்களிப்பை இந்திய நிறுவனங்களால் பெற முடியும். இதுபோன்ற பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, மத்தியில் அமைய உள்ள அரசிடம் வழங்கப்படும். பரிந்துரைகளின் அடிப்படையில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டால், சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள், உற்பத்தி பிரிவுகளை இந்தியாவிற்கு மாற்றும். இதனால் உள்நாட்டில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும், வர்த்தக பொருளாதாரமும் அதிகரிக்கும் என்றும் ஆகி கூறியுள்ளார்.