டெல்லி : இந்தியாவின் அன்னிய செலவாணி கையிருப்பு ஏப்ரல் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் $414.14 பில்லியனாக குறைந்ததுள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்படுள்ளது என்னவெனில், நாட்டி அன்னிய செலவாணி கையிருப்பு கடந்த ஏப்ரல் 19-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் $739.2 மில்லியன் குறைந்து $414.147 பில்லியனாக குறைந்ததுள்ளது.
இதுவே இதற்கு முன்னர் வெளியிட்ட கடந்த ஏப்ரல் -12 ஆம் தேதியுடன் முடிவடைந்த இதற்கு முந்தைய வாரத்தில் $ 1.105 பில்லியன் அதிகரித்து $ 414.886 பில்லியனாக அதிகரித்தது.
தங்கத்தின் கையிருப்பில் மாற்றம் இல்லை
மேலும் கணக்கீட்டு வாரத்தில் ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் அன்னியச் செலவாணி சொத்து மதிப்பு $ 728.6 மில்லியன் சரிந்து $386.033 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. இதுவே தங்கத்தின் கையிருப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் $ 23.303 பில்லியன் டாலராக காணப்படுகிறது.
அன்னிய செலவாணி கையிருப்பு அதிகம்
கடந்த 2018- ஆம் ஆண்டில் ஏப்ரல் 13-ம் தேதியுடன் முடிவடைந்த வரத்தில் தான் அன்னிய செலவாணி கையிருப்பு வரலாற்றில் முதன் முறையாக $ 426.028 பில்லியனாக அதிகரித்திருந்தது. எனினும் இதன் பின்னர் பல்வேறு காரணங்களால் இது குறைந்து போனது என்றும் இந்த புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் இருப்பு நிலை $3.354 பில்லியன் குறைவு
இதுவே சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பு 3.2 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 1.455 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளன. இதுவே நாட்டின் இருப்பு நிலை 7.4 மில்லியனாக குறைந்து 3.354 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு நாட்டின் அன்னிய செலாவணி அதிகளவில் கையிருப்பு இருந்தால் மட்டுமே சர்வதேச கொடுக்கல் வாங்கலுக்கு சிக்கல் வராமல் இருக்கும் என்பது குரிப்பிடத்தக்க விஷயமாகும்.