இந்தியாவின் குழந்தைகளுக்கான மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சந்தையின் மதிப்பு 4000 கோடி ரூபாய். இதில் 3,000 கோடி ரூபாய் சந்தையை நம் Johnson and Johnson சிங்கிலாக கையில் வைத்திருக்கிறது.
ஆனால் இப்போது ஒட்டு மொத்த இந்திய சந்தைகளை காலி செய்யும் விதத்தில் Johnson and Johnson நிறுவனம் வெளியிடும் குழந்தைகளுக்கான பவுடர்கள் மற்றும் ஷாம்பூக்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஃபார்மால்டிஹைட் (Formaldehyde) என்கிற கார்சினோஜென் கூறுகள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள மருந்துகள் சோதனைக் கூடத்தில் (Drug Testing Lab) மேற்கொண்ட பரிசோதனைகளில் Johnson and Johnson நிறுவனத்தின் பொருட்களில் புற்றுநோய்க் கூறுகளான கார்சினோஜென் இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.
தலைமைச் செயலர்களுக்கு கடிதம்
இந்த விவரத்தைக் கேள்விப்பட்ட உடனேயே National Commission for Protection of Child Rights (NCPCR) தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு Johnson and Johnson நிறுவன பொருட்களை விற்கத் தடை விதிக்குமாறு வலியுறுத்தி கடிதமே எழுதி இருக்கிறது. அதற்கு ஜெய்ப்பூர் மருந்து பரிசோதனைச் சாலைகளில் நடத்திய சோதனை அறிக்கைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு இந்த கடிதத்தை எழுதி இருக்கிறது.
தெரியப்படுத்த வில்லை
Johnson and Johnson நிறுவனமோ ஜெய்பூர் மருந்து சோதனைச் சாலைகளின் அறிக்கைகளை தாங்கள் நம்பவில்லை என பகிரங்கமாக போட்டு உடைத்துவிட்டார்கள். தங்கள் பொருட்களில் நடத்தப்படும் பரிசோதனைகள் குறித்தும், தங்கள் பொருட்களில் புற்றுநோய் காரணிகளான கார்சினோஜென் இருப்பது குறித்தும் எந்த ஒரு விவரமும் தெரிவிக்கப்படவில்லை என்கிறார்கள்.
சொல்லவில்லை
அதோடு இந்தியாவின் மத்திய மருந்து சோதனைச் சாலைகளில் Johnson and Johnson நிறுவன பொருட்களை சோதனைக்கு கொடுத்திருக்கிறார்களாம். அந்த முடிவுகளுக்காக காத்திருக்கிறார்களாம். ஆகையால் Johnson and Johnson நிறுவன பொருட்களைப் பரிசோதனைச் செய்யும் போதும் சரி, செய்த பின் நாடு முழுக்க Johnson and Johnson பொருட்களுக்கு தடை விதிக்கச் சொல்லும் முன்பும் சரி தங்களுக்கு முறையாக தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் கொந்தளிக்கிறார்கள்.
100% பின்பற்றுகிறோம்
அதோடு இந்திய அரசு சொல்லி இருக்கும் அனைத்து விதிமுறைகளையும் Johnson and Johnson 100% பின்பற்ரி இருக்கிறது எனவும், Johnson and Johnson நிறுவனத்தின் பொருட்கள் பயன்படுத்த பாதுகாப்பானதாகவும் சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டில் சொல்லப்படும் விதிமுறைகளை விடவும் Johnson and Johnson பொருட்களில் கூடுதல் தரம் பின்பற்றப்படுகிறது எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
மற்ற 3 மாநிலங்கள்
இந்தியாவில் ஆந்திரா, ஜார்கண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம் என நான்கு மாநிலங்களில் இருந்து Johnson and Johnson நிறுவன பொருட்களை பரிசோதனைக்கு எடுத்துச் சென்று இருக்கிறார்களாம். இப்போது ராஜஸ்தான் தவிர மற்ற 3 மாநில முடிவுகளுக்காகவும் காத்திருக்கிறார்களாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications