திருப்பதி : நாட்டில் அதிகளவு வருவாய் உள்ள கோவில்களில் முக்கிய மான இடம் திருப்பதியாகும். அத்தகைய கோவிலில் தங்க நாணயம், வெள்ளி நாணயம் விற்பனை செய்ய படுவதாக கடந்த திங்கட்கிழமையன்று திருப்பதி தேவஸ்தானாம் அறிவித்துள்ளது.
இந்த தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் திருப்பதி கோவிந்தராஜர் பெருமாள் கோவிலில் விற்பனை செய்யப்படுகிறதாம். இந்த நிலையில் இந்த நானயங்களில் திருப்பதி ஏழுமலையான் உருவமும், பத்மாவதி தாயார் உருவமும் பதிக்கப்படுள்ளதாம்.
இந்த விற்பனைக்காக திருப்பதி கோவிந்த ராஜர் பெருமாள் கோவில் அருகில் புதிதாக விற்பனை மையம் இதற்காக திறக்கப்படுள்ளதாம்.இந்த தங்க நானயங்கள் 10 கிராம், 5 கிராம், 2 கிராம்களில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதுவே வெள்ளிக் காயின் கள் 50 கிராம், 10 கிராம், 5 கிராம் என விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிகிறது.
10.30am - 6pm தங்கம் விற்பனை
இந்த கவுண்டர்கள் காலை 10.30 மணிமுதல் மாலை 6 மணி வரை தினமும் செயல்படும் என்றும் இந்த கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் காலை 5 மனி முதல் இரவு 9 மணி வரை ஆர்ஜித சேவை டிகெட்களும் இங்கு விற்பனை செய்யப்படும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அட்சய திருதியை குறி வைத்துள்ளனர்
வரப்போகும் அட்சய திருதியை குறிவைத்து இந்த விற்பனை மையம் துவங்கப்பட்டுள்ளதாகவும், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையால் மக்கள் இதை வாங்குவது வாடிக்கையான ஒன்றே என்றாலும், திருப்பதியில் அத்வும் ஏழுமலையான், பத்மாவதி தாயார் படம் பொறித்த நாணயங்கள் வாங்குவதில் இன்னும் சந்தோஷமே என்று கூறுகிறார்கள் பக்தர்கள்.
குறைந்த அளவு எடையுள்ள காயின் வேண்டும்
இதில் அதிகளவு 2 கிராம் 3 கிராம் என குறைந்த அளவு நாணயங்களை விற்க வேண்டும் என்றும் ஏனெனில் சில சமயங்களில் குறைந்த அளவு எடையுள்ள காயின் கள் கிடைக்காது என்றும், இதானல் அடிப்படைதட்டு மக்களால் வாங்க முடியாது என்றும், ஆக 1 கிராம், 2கிராம், 3 கிராம் அளவுகளிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே மக்களின் கருத்து.