ஒரு தவணையை தாமதமாகச் செலுத்தினாலும் Risk Premium என்கிற பெயரில் கூடுதல் வட்டி..! அதிரடியில் SBI..!

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான SBI நாளை முதல் (மே 01, 2019) முதல் சில புதிய வட்டி விகிதங்களை அமல்படுத்தப் போகிறது.

குறிப்பாக சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், ஓவர்டிராஃப்ட் மற்றும் கேஷ் க்ரெடிட் கணக்குகள் வழியாக கடன் பெறுபவர்களுக்கு புதிய வட்டி விகித மாற்றங்களை அறிவித்திருக்கிறது.

கடந்த டிசம்பர் 2018 நிலவரப்படி 28 லட்சம் கோடி ரூபாயை டெபாசிட்டாகவும், அதில் 21 லட்சம் கோடி ரூபாயை கடனாகவும் கொடுத்து, இந்திய வங்கிகளிலேயே பெரிய தெளலத்தாக வளம் வந்து கொண்டிருக்கிறது. சரி என்ன என்ன மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

 3.25% தான் வட்டி

3.25% தான் வட்டி

மத்திய ரிசர்வ் வங்கி, கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு பணக் கொள்கை முடிவின் போதும், ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தது. இப்போது ரெப்போ வட்டி விகிதத்தின் அளவு 6 சதவிகிதமாக இருக்கிறது. ஆக இனி மே 01, 2019 முதல் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 3.25% ஆக குறைத்திருக்கிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனால் ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் SBI சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருப்பவர்களுக்கு 3.25% மற்றும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு 4% வட்டியும் கணக்கிடுவார்களாம்.

 3.5% வட்டி

3.5% வட்டி

2. SBI-ன் சேமிப்பு வங்கிக் கணக்குகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் பணம் வைத்திருப்பவர்களுக்கான வட்டி விகிதம் 3.5%-ஆக நிர்ணயித்திருக்கிறார்களாம். SBI சேமிப்புக் கணக்கில் பணம் வைத்திருப்பவர்களில் 95%-த்தினர் ஒரு லட்சம் ரூபாய்க்குள் தான் வைத்திருக்கிறார்களாம்.

 ரெப்போ ரேட்

ரெப்போ ரேட்

3. SBI வங்கியிடம் வாங்கி இருக்கும் ஓவர்டிராஃப்ட் கடன்கள் மற்றும் கேஷ் க்ரெடிட் கணக்குகளின் கீழ் கடன் வாங்கி இருக்கும் தொகைகளுக்கு வரும் மே 01, 2019 முதல் ஆர்பிஐ நிர்ணயித்திருக்கும் ரெப்போ ரேட் விகிதம் + 2.25% என வட்டி வசூலிக்க இருக்கிறார்களாம். இதனால் கடனாளிகளுக்கு ஆர்பிஐயின் ரெப்போ ரேட் அடிப்படையிலேயே கடன் கிடைக்கும் எனச் சொல்கிறது SBI.

 ஒரு தவணை தாமதம்

ஒரு தவணை தாமதம்

4. இந்த கேஷ் க்ரெடிட் கணக்குகள் மற்றும் ஓவர்டிராஃப்ட் கணக்குகளின் கீழ் கடன் வாங்குபவர்களில், இதுவரை ஒழுங்காக வட்டியைச் செலுத்தாதவர்களுக்கு, தாமதமாக இ.எம்.ஐ-க்களை செலுத்தியவர்கள் மற்றும் தவணைகளை சரியாகச் செலுத்தாதவர்களுக்கு என்றே தனியா ரிஸ்க் பிரீமியத்தையும் வட்டியோடு கூடுதலாக வசூலிக்க இருக்கிறதாம்.

அதாவது எல்லோருக்கும்10% வட்டி என்றால் ஒரு கடன் தவணையைத் தாமதமாகச் செலுத்தியவர்களுக்கு கூட கூடுதல் ரிஸ்க் பிரீமியம் என்கிற பெயரில் 10% + 0.5% = 10.5% வட்டியாகச் செலுத்த வேண்டும். ஆக ஒழுங்காக இ எம் ஐ-க்களைச் செலுத்துங்கள் மக்களே. இந்த கூடுதல் ரிஸ்க் பிரீமியம் ஏற்கனவே சொன்னது போல ஓவர்டிராஃப்ட் மற்றும் கேஷ் க்ரெடிட் கணக்குகளுக்கு மட்டுமே இப்போதைக்கு அறிவித்திருக்கிறது எஸ்பிஐ.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+