சத்தியமா டீசல் கார் உற்பத்திய நிறுத்த மாட்டோம்.. விதிமுறைக்கு ஏற்ப புதுப்பிபோம்.. Ford உறுதி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்கள் இணைந்து கார்களை தயாரிக்க ஒப்பந்தம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளன. முன்னனி நிறுவனங்களான இந்த இரு நிறுவனங்களின் இணைப்பும் சந்தையில் பட்டைய கிளப்பும் என்றும் மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது போர்டு நிறுவனம் டீசல் உற்பத்தியை நிறுத்தப் போவதில்லை. இது தொடரும் என்று ஃபோர்டு இந்திய நிறுவனத்தின் செயல் இயக்குனர் வினய் ரெய்னா அறிவித்துள்ளார்.

இந்த நிலையிலையில் இது குறித்து ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் டீசல் கார்களின் விற்பனை தொடரும் என்றும், வாடிக்கையாளர்களின் விருப்பத்தை ஏற்று உற்பத்தியை நிறுத்த போவதில்லை என்றும் அறிவித்துள்ளது அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம்.

பி.எஸ்6 - மாசு கட்டுப்பாட்டு தர விதிமுறைகள் நடை முறைபடுத்துவதற்கான கால அவகாசம் ஏப்ரல்1 2020 - வுடன் முடிவடைவதையடுத்து வாடிக்கையாளர்கள் இவ்வாறு கூறியிருந்தாலும், ஃபோர்டு நிறுவனம் அந்த தர நிர்ணய விதி முறைகளுக்கு ஏற்ப வாகன உற்பத்தியை மாற்றி விடும் என்று கூறுகிறதாம் ஃபோர்டு நிறுவனம்.

பச்சைத் தங்கத்தை உற்பத்தி செய்வதில் ஆர்வம்... அங்கோலாவில் விவசாயம் பிரமாதம் பச்சைத் தங்கத்தை உற்பத்தி செய்வதில் ஆர்வம்... அங்கோலாவில் விவசாயம் பிரமாதம்

மக்கள் டீசல் கார்களையே விரும்புகின்றனர்

மக்கள் டீசல் கார்களையே விரும்புகின்றனர்

இந்த நிறுவனத்தின் 65 சதவிகித வாடிக்கையாளர்கள் எக்ஸ்கோஸ் போர்டு காரை காட்டிலும், டீசல் கார்களையே விரும்பி வாங்குகின்றனர். இதற்கு காரணம் டீசல் கார்களையே அதிகம் விரும்பி வாங்குகின்றனர். டீசல் மீதான அரசு மானியத்தை அரசு விலக்கிக் கொண்டுள்ள போதிலும் கூட வாடிக்கையாளர்கள் டீசல் கார்களையே வாங்குகின்றனர்.

சத்தியமா உற்பத்தி தொடரும்

சத்தியமா உற்பத்தி தொடரும்

ஆக இந்த நிலை தற்போது மட்டுமல்ல, இந்த தர விதி முறைகள் செயல்பாட்டுக்கு வந்த போதிலும் இந்த உற்பத்தியும் விற்பனையும் தொடரும். இதனால் மக்கள் ஏதும் பயப்பட வேண்டாம் எனவும், தர நிர்ணய விதி முறைகள் பயன்பாட்டிற்கு வந்தாலும் அதற்கேற்றவாறு கார்கள் உற்பத்தி இருக்கும்.

செலவு அதிகமாகும்- விலையும் அதிகமாகும்

செலவு அதிகமாகும்- விலையும் அதிகமாகும்

ஆனால் இந்த தர நிர்ணயம் நிர்ணயிக்கப்பட்டால் உற்பத்தி செலவினங்கள் அதிகமாகும் என்பதால் கார்களின் விலை அதிகமகாலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம். இந்த நிலையில் மற்ற கார் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்த போவதாக அறிவித்த போதிலும் ஃபோர்டு நிறுவனம் இவ்வாறு அறிவித்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணியும் தொடரும்

ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணியும் தொடரும்

இந்த நிலையில் மஹிந்திரா- ஃபோர்டு கூட்டணியில் புதிய எஸ்யூவி மாடல் உருவாக்கப்பட இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இருக்காது. ஃபோர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இந்திய சந்தையில் இணைந்து செயல்பட இருப்பது உறுதிதான் என்றும் அறிவித்துள்ளதாம் ஃபோர்டு நிறுவனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ford India Will Continue To Sell Diesel Engines

Vinay Rana, Executive Director, Ford India said, We will continue to offer the power of choice to consumers and will not stop diesel models. Ford will also be fully ready with its range of BS-VI compliant diesel powertrains ahead of April 2020 implementation.
Story first published: Thursday, May 2, 2019, 13:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X