மும்பை : நாட்டின் முன்னனி நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் அவரது நிதியியல் சேவை சம்பந்தமான வணிகமானது அதாவது அதன் இலாபத்தை ஐந்தாண்டுகளில் இரு மடங்காக அதிகரித்தது. ஆனால் இந்த லாபம் தற்போது கேள்விக் குறியாகவே உள்ளது.
ஆனால் தற்போது நாட்டி மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் கடன் பிரச்சனையால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த பாதிப்பு ஐந்தாவது மிகப்பெரிய பரஸ்பர நிதியத்தை கட்டுப்படுத்தும் நிறுவனமாகவும் உள்ளது.
ஏனெனில் கடந்த மார்ச் மாதத்திற்குள் 110 மில்லியன் ரூபாயை இழந்த தன் பின்னர், அதன் நிதிகளை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்ட $ 2 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை விற்பனை செய்ய வித்திடுவதாக CARE மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
குறுகிய கால முதலீடுகள் குறைந்துள்ளன
இந்த நிலையில் கடந்த மே மற்றும் ஜீன் மாதங்களில் $252 மில்லியனுக்கும் அதிகமாக கடனில் முழ்கியதையடுத்து, மூடிஸ் முதலீட்டாளர்கள் இரண்டு உள்ளூர் நிறுவனங்களில் குறுகிய கால முதலீடுகளை தற்போது நிறுத்தியுள்ளன. மேலும் அந்த இரு நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனமும் ஒன்று என்பதே கவனிக்கதக்க விஷயமாகும் .
இழப்புக்கு காரணம்- செலவினங்கள் அதிகரிப்பு
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்திற்கு தொடர்பில்லாத நாடுகளின், மிக பெரிய கடன் வழங்குனரான ஒரு நாட்டில் கலகம் ஏற்பட்டதையடுத்து, தொழிற்துறையில் செலவினங்கள் மிக அதிகமாக உயர்ந்தன. இந்த செலவின அதிகரிப்பும் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் இழப்புக்கு ஒரு காரணமாக கருத்தப்படுகிறது.
நெருக்கடியை தவிர்க்க சொத்து ஒதுக்கீடு
இதையடுத்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஒரு நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு சொத்துக்கள் ஒதுக்கீடு மிக முக்கியம் என்று சில நிதி நிறுவன அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த கடனிலிருந்து மீண்டு வர நீண்டகால முதலீடுகள் வரும் வரை, ரிலையன்ஸ் கேபிட்டலுக்கு நெருக்கடிகள் இருந்து கொண்டே தான் இருக்கும் என்றும் அந்த நிதி நிறுவனங்கள் அறிக்கையில் கூறியுள்ளன.
பதில் தர மறுப்பு
மேலும் இந்த நிதி நெருக்கடிகள் குறித்தும், வரவிருக்கும் ரீபேமன்ட்கள் குறித்தும், இதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என்பது குறித்தும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது அவர் அதுகுறித்த பதிலை தராமல் மறுத்துவிட்டராம்.
கடனை செப்டம்பருக்குள் செலுத்தி விடுவோம்
ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் -27ம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில் குறுகிய கால கடன் 9.5 பில்லியன் ரூபாய் இருப்பதாகவும், இத் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தனது சொத்துக்களை (பங்குகளை) விற்பனை செய்வதன் மூலம் முழுமையாக செலுத்தி விடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த பங்குகளின் மதிப்பு சுமார் 43 சதவிகிதமாகும். அதவாது 53 பில்லியன் ரூபாயாகும்.
கடன் குறியீடு குறைந்துள்ளது.
இந்த நிலையில் CARE மதிப்பீடுகள் ஏப்ரல்- 18 வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் கேப்பிட்டலின் நீண்டகால மதிப்பீட்டை (கடன் குறியீட்டை) A இலிருந்து A + க்குக் குறைத்துள்ளன.


Click it and Unblock the Notifications