பெங்களூரு பெங்களூரில் பச்சை மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் சமைக்கும் பெரும்பாலான உணவுகளில் பச்சை மிளகாய், பீன்ஸ், தக்காளி சேர்க்கப்படுவது வழக்கம். குறிப்பாக கர்நாடக பிரசித்தமான உணவுகளான புலாவ், பிஸிபெலெபாத், சாம்பார், ப்ளயா உள்ளிட்ட உணவுகளை பீன்ஸ் இல்லாமல் பார்க்க முடியாது.
அப்படி ஒதுக்க முடியாத பீன்ஸ் விலை கிலோ 100 ரூபாயை தாண்டியுள்ளது. மேலும் தக்காளி மற்றும் பச்சை மிளகாயின் விலையும் தீயாய் உயர்ந்துள்ளது.
தக்காளி பச்சைமிளகாய்
ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதேபோல் பச்சை மிளகாய் விலையும் தீயாய் உயர்ந்து கிலோ ரூபாயை எட்டியுள்ளது.
இல்லத்தரசிகள் கவலை
விலை உயர்வு தொடர்பாக பேசிய ரேகா என்ற இல்லத்தரசி தக்காளி, மிளகாய் மற்றும் பீன்ஸ் ஆகியவை இன்றியமையாத பொருட்களாக இருக்கின்றன, இது இல்லாமல் நாம் எதையும் தயாரிக்க முடியாது. ஆனால் கடந்த சில நாட்களாக இதன் விலைகள் உயர்ந்துவிட்டன என சோகமாக கூறியுள்ளார்.
தண்ணீர் பற்றாக்குறை
தக்காளி விலை உயர்வுக்கு தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கடுமையான வெயிலே காரணம் வணிகர்கள் தெரிவித்துள்ளனர். கோலார் பிராந்தியத்தில் அதிகளவு தக்காளி பயிரிடப்பட்டுள்ள நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பயிர்கள் காய்ந்து போயிருப்பதாகவும் இதனால் மகசூல் பாதிக்கப்பட்டதே விலை உயர்வுக்கு காரணம் என்றும் தக்காளி கொள்முதல் செய்யும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
பீன்ஸ் உற்பத்தி குறைவு
நகருக்கு பீன்ஸ் அனேகல், டோடாபல்லாபூர், தேவனஹல்லி ஆகிய பகுதிகளில் இருந்து சப்ளை செய்யப்படும் நிலையில் அங்கும் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் உற்பத்தி பாதியாக குறைந்திருப்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
கணிசமாக உயர்வு
உருளை கிழங்கு மற்றும் வெங்காயத்தை தவிர மற்ற அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு காயும் கிலோ 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications