மும்பை: மத்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வந்த நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) மற்றும் நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard) ஆகிய இரண்டு நிறுவனத்தையும் 1470 கோடி ரூபாய்க்கு மத்திய அரசிடமே விற்று விட்டது ஆர்பிஐ.
இனி இந்த நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) மற்றும் நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard) நிறுவனங்களில், ஆர்பிஐ எந்த ஒரு அதிகாரத்தையும் செலுத்த முடியாது.
நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) நிறுவனத்தை முழுமையாக மத்திய அரசுக்கு தாரை வார்த்துக் கொடுக்க பங்குகள் மதிப்பீட்டின் படி 1,450 கோடி ரூபாய் விலை பேசி இருக்கிறார்களாம். அதே போல நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard) வங்கியின் பங்குகளையும் மதிப்பிட்டு 20 கோடி ரூபாய்க்கு விலை நிர்ணயித்தார்களாம்.
பரிமாற்றம்
ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) நிறுவனத்தின் பங்குகளை கடந்த மார்ச் 19, 2019 அன்றே மத்திய அரசுக்கு பரிமாற்றம் செய்து விட்டதாம். கடந்த 26 பிப்ரவரி 2019-ல் நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard) பங்குகளை மத்திய அரசுக்கு பரிமாற்றம் செய்ததாம்.
மத்திய அரசின் கீழ்
தற்போது நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) மற்றும் நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard)ஆகிய இரண்டு அமைப்புகளின் 100 சதவிகித பங்குகளையும் மத்திய அரசு தான் வைத்திருக்கிறார்கள், என ரிசர்வ் வங்கி தன் அறிக்கையிலேயே சொல்லி இருக்கிறதாம்.
ஏன் இந்த மாற்றம்
ஏன் திடீரென ரிசர்வ் வங்கி தனக்கு கீழ் இயங்கி வந்த நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) மற்றும் நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard) நிறுவனங்களை அரசுக்கு கொடுக்கிறது எனக் கேட்டால் நரசிம்மன் கமிட்டி அறிக்கையைச் சுட்டிக் காட்டுகிறர்கள்.
கமிட்டி பரிந்துரைகள்
நரசிம்மன் கமிட்டியினர் அக்டோபர் 2001-ல் கொடுத்த பரிந்துரைகளில், ரிசர்வ் வங்கியின் நெறிமுரைப்படுத்தலின் கீழ் வரும் நிறுவனங்களை, ரிசர்வ் வங்கியே வைத்திருக்கக் கூடாது எனப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். அதோடு 'Harmonizing the role and operations of developing financial institutions and banks' என்கிற தலைப்பில் ரிசர்வ் வங்கியும் நரசிம்மன் கமிட்டி சொல்வதை ஆமோதிக்கிறார்கள். எனவே தான் இந்த அதிகாரப் பரிமாற்றம் என அரசுத் தரப்பும், ஆர்பிஐ தரப்பும் சேர்ந்தே ஆமோதிக்கிறார்கள்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications