மும்பை : நிறுவனம் அமெரிக்கா - சீனா இடையே நிலவிவரும் வர்த்தக போரினால் இந்த இரண்டு நாடுகளுக்குக் இடையே வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகத்தில் மருந்து உற்பத்தியும் ஒன்று. ஆதாலால் இந்திய நிறுவனமான சன் பார்மா தற்போது சீனா மற்றும் ஜப்பான் மீது கவனம் செலுத்துவதாக அறிவித்துத்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவுடன் மருந்து உற்பத்தியில் கூட்டணியிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீனாவில் நிலவி வரும் வர்த்தக போரால் இந்திய மருந்து கம்பெனிகளுக்கு மிகப் பெரிய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளார் சன் பார்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைவருமான தீலிப் சாங்வி.
இந்த நிலையில் பிராண்ட் மற்றும் பிராண்டேட் அல்லாத மருந்துகளுக்கு உள் நாட்டு சந்தையில் பெரியதாக ஒரு வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார். ஆனால் வாய்ப்பு உள்ள போதிலும் இந்த மருந்து விலை நிர்ணயத்திலில் அரசு தலையிடுவது பெரும் சவாலாக உள்ளது.
அரசு குறைந்த விலையில் மருந்து தர திட்டம்
இந்த நிலையில் அரசு மக்களுக்கு மருந்துகளை குறைந்த விலைக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதனால் விலை நிர்ணயிப்பதிலும் தலையிடுகிறது. எனினும் சன் பார்மா இது போன்ற பிரச்சனைகளை தடுக்க சீனாவுடன் பங்காளாராக சேர முடியுமா என்பதை பற்றி ஆய்வு செய்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.
இந்திய உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்பு
சீனாவின் மிக விலை உயர்ந்த பல் சம்பந்தமான் மருந்துகள் மொத்தமாக வாங்கப்படுவதால், இந்தியாவில் இந்திய உற்பத்தி நிறுவனங்கள் மிக பாதிக்கின்றன. மேலும் தொடர்ந்து சீனாவிடம் மொத்தமாக கொள்முதல் செய்வதால், தற்போது சீனாவிலும் சற்று விலை அதிகரித்துள்ளது.
இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன
இதனால் இந்தியாவில் சன் பார்மா போன்ற பல மருந்து நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் நோயாளிகளுக்கு விரைவில் குணமாக அணுகுவதையடுத்து புதிய பல மருந்துகள் அங்கீகரிக்கப்படுகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் வர்த்தக பொருளாதாரக் கொள்கையினால், உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளாரான அமெரிக்காவில் விலை அதிகரிப்பதோடு, இது சன் பார்மா உள்ளிட்ட பல இந்திய நிறுவனங்களை வெகுவாக பாதித்துள்ளன.
மற்ற நிறுவனங்கள் சீனாவில் விரிவாக்கம்
ஏற்கனவே இந்தியாவில் சன் பார்மார் நிறுவனத்திற்கு போட்டியாக உள்ள, டாக்டர் ரெட்டிஸ் லெபாரெட்டீஸ் லிமிடெட் மற்றும் சிப்லா லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே சீனாவில் விரிவடைந்து வருகின்றன. இந்த நிலையில் சன் பார்மா நிறுவனமும் தற்போது தனது சீனாவில் வர்த்தகத்தை விரைவில் ஆரம்பிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விற்பனை குறைந்தது
இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பாளர் நிறுவனமான சன் பார்மாவின் மொத்த விற்பனை மூன்று ஆண்டுகளுக்குள் 4 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் இது தற்போது குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இல்லை என்று கூறுகிறார் சாங்வி.
சன் பார்மா 52% பங்கு சந்தையிலும் வீழ்ச்சி
இதோடு இந்திய பங்கு சந்தையில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சன் பார்மா 52 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதையடுத்து அமெரிக்காவினால் அங்கீகரிக்கப்பட்ட பெரிய போர்ட்போலியோ மருந்துகள், சீனாவில் சிறிய முதலீட்டில் வர்த்தகத்தை தொடங்க உதவும் எனவும், சீனாவில் வர்த்தகத்தை தொடங்க மிக ஆர்வத்துடன் இருக்கிறோம் என்றும் சாங்க்வி கூறியுள்ளார்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications